| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| காளிதாசன் | மனோ & சுஜாதா மோகன் | சிற்பி | நம்ம ஊரு ராசா |
Ennudaiya Maadapura Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : என்னுடைய மாடப்புறா…
என் வாழ்வின் ஜோடிப்புறா…
என்னிடத்திலே சேருமா இளமானே…
ஆண் : ஊருக்குள்ள நீயிருந்தும்…
உள்ளத்திலே நினைப்பிருந்தும்…
வேறுபட்டு நீயும் அப்படி…
நானும் இப்படி ஆனோமே…
ஆண் : என்னுடைய மாடப்புறா…
என் வாழ்வின் ஜோடிப்புறா…
என்னிடத்திலே சேருமா இளமானே…
—BGM—
ஆண் : மண்ணைத்தொட்டு பிறந்ததெல்லாம்…
மண்ணுக்குள்ளே மறைந்துவிடும்…
பெண்ணைத்தொட்டு மலரும் நினைவு மறைவதில்லையடி…
ஆண் : மண்ணைத்தொட்டு பிறந்ததெல்லாம்…
மண்ணுக்குள்ளே மறைந்துவிடும்…
பெண்ணைத்தொட்டு மலரும் நினைவு மறைவதில்லையடி…
ஆண் : உன்னைத்தொட்ட நினைவு வந்து…
என்னைத்தொட்டு துயரம் தந்து…
கண்ணைத்தொட்டு கலங்க வைப்பது குறையவில்லையடி…
ஆண் : இன்று உரிமை இருந்தும் உனக்கும் எனக்கும்…
உறவுயில்லையடி…
இங்கு உனது கதையும் எனது கதையும்…
விதியின் கையிலடி…
ஆண் : என்னுடைய மாடப்புறா…
என் வாழ்வின் ஜோடிப்புறா…
என்னிடத்திலே சேருமா இளமானே…
—BGM—
பெண் : என்னுடைய மனசுக்குள்ள எட்டு வைச்சு புகுந்த உன்னை…
தொட்டுவிட எனக்கும் மனசில் விருப்பம் உள்ளதைய்யா…
என்னுடைய மனசுக்குள்ள எட்டு வைச்சு புகுந்த உன்னை…
தொட்டுவிட எனக்கும் மனசில் விருப்பம் உள்ளதைய்யா…
பெண் : மொட்டுவிடும் விருப்பத்தையே கட்டிவைச்சு தடுப்பதுபோல்…
சுத்தி உள்ள தடைகள் எனக்கு நடுவில் நிக்குதைய்யா…
தினம் எனது மனது உனது நினைவில் மாலை கட்டுதைய்யா…
எந்தன் இதயக்கதவை உனது நினைவு தினமும் தட்டுதைய்யா…
ஆண் : என்னுடைய மாடப்புறா…
என் வாழ்வின் ஜோடிப்புறா…
என்னிடத்திலே சேருமா இளமானே…
பெண் : ஊருக்குள்ள நீயிருந்தும்…
உள்ளத்திலே நினைப்பிருந்தும்…
வேறுபட்டு நீயும் அப்படி நானும் இப்படி ஆனோமே…
ஆண் : என்னுடைய மாடப்புறா…
என் வாழ்வின் ஜோடிப்புறா…
என்னிடத்திலே சேருமா இளமானே…
என்னிடத்திலே சேருமா இளமானே…
Notes : Ennudaiya Maadapura Song Lyrics in Tamil. This Song from Namma Ooru Raasa (1996). Song Lyrics penned by Kalidasan. என்னுடைய மாடப்புறா பாடல் வரிகள்.
