பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கண்ணதாசன் | டி.எம்.சௌந்தரராஜன் & பி. சுசீலா | எம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்தி | பாலும் பழமும் |
Ennai Yaar Endru Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்…
இது யார் பாடும் பாடல் என்று நீ கேட்கிறாய்…
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்…
இது யார் பாடும் பாடல் என்று நீ கேட்கிறாய்…
ஆண் : நான் அவள் பேரை தினம் பாடும் குயிலல்லவா…
என் பாடல் அவள் தந்த மொழி அல்லவா…
ஆண் : என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்…
இது யார் பாடும் பாடல் என்று நீ கேட்கிறாய்…
—BGM—
பெண் : என்றும் சிலையான உன் தெய்வம் பேசாதய்யா…
சருகான மலர் மீண்டும் மலராதய்யா…
என்றும் சிலையான உன் தெய்வம் பேசாதய்யா…
சருகான மலர் மீண்டும் மலராதய்யா…
பெண் : கனவான கதை மீண்டும் தொடராதய்யா…
கனவான கதை மீண்டும் தொடராதய்யா…
காற்றான அவள் வாழ்வு திரும்பாதய்யா…
பெண் : என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்…
இது யார் பாடும் பாடல் என்று நீ கேட்கிறாய்…
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்…
—BGM—
ஆண் : எந்தன் மனக்கோயில் சிலையாக வளர்ந்தாலம்மா…
மலரோடு மலராக மலர்ந்தாலம்மா…
எந்தன் மனக்கோயில் சிலையாக வளர்ந்தாலம்மா…
மலரோடு மலராக மலர்ந்தாலம்மா…
ஆண் : கனவென்னும் தேரேறி பறந்தாலம்மா…
கனவென்னும் தேரேறி பறந்தாலம்மா…
காற்றோடு காற்றாக கலந்தாலம்மா…
ஆண் : என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்…
இது யார் பாடும் பாடல் என்று நீ கேட்கிறாய்…
—BGM—
பெண் : இன்று உனக்காக உயிர் வாழும் துணை இல்லையா…
அவள் ஒளி வீசும் எழில் கொண்ட சிலையில்லையா…
பெண் : அவள் வாழ்வு நீ தந்த வரமல்லவா…
அவள் வாழ்வு நீ தந்த வரமல்லவா…
அன்போடு அவளோடு மகிழ்வாய் ஐயா…
ஆண் & பெண் : என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்…
இது யார் பாடும் பாடல் என்று நீ கேட்கிறாய்…
பெண் : என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்…
Notes : Ennai Yaar Endru Song Lyrics in Tamil. This Song from Palum Pazhamum (1961). Song Lyrics penned by Kannadasan. என்னை யாரென்று பாடல் வரிகள்.