என்னை என்ன

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிசுதா ரகுநாதன்இளையராஜாஇவன்

Ennai Enna Seithai Song Lyrics in Tamil


BGM

பெண் : என்னை என்ன செய்தாய் வேங்குழலே…

BGM

பெண் : என்னை என்ன செய்தாய் வேங்குழலே…
என்னை என்ன செய்தாய் வேங்குழலே…
எனக்கும் உனக்கும் ஒரு பகை இல்லையே…
எனக்கும் உனக்கும் ஒரு பகை இல்லையே…

பெண் : நாளும் சுக நாதம் தந்து அனல் மெழுகாய்…
இந்த இள மனம் இளகிடவே…
என்னை என்ன செய்தாய் வேங்குழலே… ஏஏ…

BGM

பெண் : என்றும் இசை வேள்வி நடத்துகின்றேன்… ஏஏஏ ஏஏ…

BGM

பெண் : என்றும் இசை வேள்வி நடத்துகின்றேன்…
என்றும் இசை வேள்வி நடத்துகின்றேன்…
என்னுள் எனைக் கண்டு…
நல் இன்பம் படைத்து நின்றேன்…
என்றும் இசை வேள்வி நடத்துகின்றேன்…
என்னுள் எனைக் கண்டு…
நல் இன்பம் படைத்து நின்றேன்…

பெண் : வேறு ஞாபகங்கள் வருடாமல் நான் இருந்தேன்…
வேறு ஞாபகங்கள் வருடாமல் நான் இருந்தேன்…
யாரோ… அவன் யாரோ…
யாரோ அவன் யாரோ…
யமுனா நதி தீரத்தில் அமர்ந்தொரு இசை கலையால்…

பெண் : என்னை என்ன செய்தாய் வேங்குழலே…
என்னை என்ன செய்தாய் வேங்குழலே…

ஆண் : மழைக் கம்பி குத்தாமல் இருக்க…
குடைக் கம்பியாய் ஒதுங்கினேன்…
குடை அல்ல அது உன் குரல் அருவி குற்றாலம்…

பெண் : ரி க ரிக நிஸரி நிஸரி த த நி ரீரீ…
ச நி த ப த ச நி ச ரி நி நி ச க ரி…

ஆண் : கானம் கேட்க கண் மூடப் போய்…
காணாமலே போனேன் நான்…

பெண் : கக ரிகாக ஸாநீநி ஸரீரி பமாம தநீநி…

ஆண் : விட்டுக் கூடு பாய்ந்திருப்பேனோ…
என தட்டுத் தடுமாறித் தேடி…
காதுகளாய் இரைந்து கிடக்கும்…
உன் கால் அடிவாரம் வந்தடைந்தேன்…

பெண் : மூங்கில் போலே விளைந்தொரு…
மங்கை இருக்க…

ஆண் : அடடா தாளம் இடும் கைக்கும்…
தட்டுப் படும் உன் தொடைக்கும் இடையே…
நான் சிக்கிக் கொண்டிருப்பதை கண்டு கொண்டேன்…

பெண் : மூங்கில் போலே விளைந்தொரு…
மங்கை இருக்க…
துளைக்கும் வண்டாய் மனதை…
துளைத்தாய் நீயே…

ஆண் : ஏனோ காது கொடுக்க வந்தவன்…
வெறும் காதோடு மட்டுமே போகிறேன் போ…

BGM

பெண் : தூங்கும் யாழாய் தனிமையில் தோகை இருக்க…

BGM

பெண் : மீட்டும் விரலாய் நரம்பினில் நடந்தாய் நீயே…

BGM

பெண் : வண்ணம் மலர் உண்டு…
வண்ணம் மலர் உண்டு…
வெள்ளி அலை உண்டு…
வருடிடும் காற்றென உலவ போ…

BGM

பெண் : வண்ணம் மலர் உண்டு…
வெள்ளி அலை உண்டு…
வருடிடும் காற்றென உலவ போ…

பெண் : பச்சைக் கொடி ஒன்று பசும் புல் மடி உண்டு…
நீர் துளியை போல தழுவ போ…
இசைகள் நுழையாத செவிகள் பல உண்டு…
உனது திறமை அங்கு பலிக்குமோ…

BGM

பெண் : நீயும் விளையாட நூறு இடம் உண்டு…
அனுதினம் வருத்துதல் நியாயமோ…

BGM

பெண் : என்னை என்ன செய்தாய் வேங்குழலே…
எனக்கும் உனக்கும் ஒரு பகை இல்லையே…
நாளும் சுக நாதம் தந்து…
இந்த இள மனம் இளகிடவே…

பெண் : என்னை என்ன செய்தாய் வேங்குழலே…
வேங்குழலே… வேங்குழலே…


Notes : Ennai Enna Seithai Song Lyrics in Tamil. This Song from Ivan (2002). Song Lyrics penned by Vaali. என்னை என்ன பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top