எங்கிருந்தாய்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஹரிஷ் ராகவேந்திராயுவன் சங்கர் ராஜாவின்னர்

Engirunthai Song Lyrics in Tamil


BGM

ஆண் : எங்கிருந்தாய் நான் மண்ணில்…
பிறந்திடும் போது…
எங்கிருந்தாய் நான் கொஞ்சம்…
வளர்ந்திடும் போது…

ஆண் : எங்கேயோ பிறந்தாய்…
அடி எங்கேயோ வளர்ந்தாய்…
இன்று என் முன்னால்…
நீயாய் வந்தாய்…

ஆண் : இதற்கென்ன அர்த்தம்…
என் உயிரெல்லாம் சத்தம்…
அடி எனக்காக நீயும் வந்தாய்…

BGM

ஆண் : எங்கிருந்தாய் நான் மண்ணில்…
பிறந்திடும் போது…
எங்கிருந்தாய் நான் கொஞ்சம்…
வளர்ந்திடும் போது…

BGM

ஆண் : நிலவின் பின்புறமாய்…
நீ தான் இருந்தாயா…
குயிலின் குரல்வளையில்…
ஒளிந்தே இருந்தாயா…

ஆண் : கடலின் அடியில் படிந்தா இருந்தாய்…
மலையின் மடியில் தவழ்ந்தா கிடந்தாய்…
இந்த உலகின் அழகெங்கும்…
நீதானா வழிந்தோடினாய்…

ஆண் : எங்கிருந்தாய் நான் மண்ணில்…
பிறந்திடும் போது…
எங்கிருந்தாய் நான் கொஞ்சம்…
வளர்ந்திடும் போது…

BGM

ஆண் : இதழை சுளிக்காதே இயங்காமல் போவேன்…
இடையை வளைக்கதே இடிந்தே நான் சாய்வேன்…
அடியே சிரிக்காதே இன்றே உடைவேன்…
ஐயோ நெளியாதே அழுதே விடுவேன்…

ஆண் : ஒரு ஊசி முனை வழியே…
உயிரை நீ வெளியேற்றினாய்…

ஆண் : எங்கிருந்தாய் நான் மண்ணில்…
பிறந்திடும் போது…
எங்கிருந்தாய் நான் கொஞ்சம்…
வளர்ந்திடும் போது…

ஆண் : எங்கேயோ பிறந்தாய்…
அடி எங்கேயோ வளர்ந்தாய்…
இன்று என் முன்னால்…
நீயாய் வந்தாய்…

ஆண் : இதற்கென்ன அர்த்தம்…
என் உயிரெல்லாம் சத்தம்…
அடி எனக்காக நீயும் வந்தாய்…

BGM


Notes : Engirunthai Song Lyrics in Tamil. This Song from Winner (2003). Song Lyrics penned by Pa. Vijay. எங்கிருந்தாய் பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top