பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
அகத்தியன் | கே.எஸ். சித்ரா | தேவா | கோகுலத்தில் சீதை |
Endhan Kural Song Lyrics in Tamil
பெண் : எந்தன் குரல் கேட்டு…
உனை தூக்கம் தழுவாதா…
—BGM—
பெண் : எந்தன் குரல் கேட்டு…
உனை தூக்கம் தழுவாதா…
பந்தம் நான் இல்லை பரிதாபம் கூடாதா…
நண்பனே நண்பனே நண்பனே…
பெண் : இவள் சொல்லும் வேதம் அரங்கேறுமா…
உனக்கென்று வாழ்வில் ஓர் நியாயமா…
இதை யாரிடம் சொல்லுவேன்…
நண்பனே நண்பனே நண்பனே…
பெண் : எந்தன் குரல் கேட்டு…
உனை தூக்கம் தழுவாத…
பந்தம் நான் இல்லை பரிதாபம் கூடாதா…
—BGM—
பெண் : இரவென்றும் பகல் என்றும் உனக்கில்லையே…
இளங்காலை பொன்மாலை உனக்கில்லையே…
மதுவென்னும் தவறுக்கு ஆளாகினாய்…
அதற்காக நியாயங்கள் நீ தேடினாய்…
பெண் : ஆயிரம் பூக்களில் ஆனந்தம் காண்கிறாய்…
நிறங்களே வேற்றுமை நினைத்திடு நண்பனே…
மது கிண்ணம்தனை எடுத்து…
பெண்ணை விலை கொடுத்து விழி மூடுமா…
பெண் : எந்தன் குரல் கேட்டு…
உனை தூக்கம் தழுவாதா…
பந்தம் நான் இல்லை பரிதாபம் கூடாதா…
—BGM—
பெண் : வரவின்றி செலவானால் தவறில்லையே…
வாழ் நாட்கள் செலவானால் வரவில்லையே…
நேற்றோடும் இன்றோடும் நீ இல்லையே…
நாளை உன் கையோடு உனக்கில்லையே…
பெண் : யாரிடம் தவறில்லை…
யாரிடம் குறை இல்லை…
தூக்கமே நிம்மதி தூங்கிடு நண்பனே…
நீ கடந்த காலங்களை கலைந்து எறிந்து விடு…
விழி மூடுமே…
பெண் : எந்தன் குரல் கேட்டு…
உனை தூக்கம் தழுவாதா…
பந்தம் நான் இல்லை பரிதாபம் கூடாதா…
நண்பனே நண்பனே நண்பனே…
பெண் : இவள் சொல்லும் வேதம் அரங்கேறுமா…
உனக்கென்று வாழ்வில் ஓர் நியாயமா…
இதை யாரிடம் சொல்லுவேன்…
நண்பனே நண்பனே நண்பனே…
—BGM—
Notes : Endhan Kural Song Lyrics in Tamil. This Song from Gokulathil Seethai (1996). Song Lyrics penned by Agathiyan. எந்தன் குரல் கேட்டு பாடல் வரிகள்.