பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
அகத்தியன் | எஸ். பி. பாலசுப்ரமணியம், கே.எஸ். சித்ரா, பேபி தீபிகா & தேவா | தேவா | கோகுலத்தில் சீதை |
Gokulathu Kanna Song Lyrics in Tamil
—BGM—
குழு : என் நாவினில் இருப்பது சரஸ்வதியே…
என்னை பாட வைப்பது கணபதியே…
—BGM—
பெண் : கோகுலத்து கண்ணா கண்ணா…
சீதை இவள்தானா…
மானும் இல்லை ராமன் இல்லை…
கோகுலத்தில் நானா…
பெண் : சோகமில்லை சொந்தம் யாரும் இல்லை…
ராவணின் நெஞ்சில் காமமில்லை…
கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே…
கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே…
—BGM—
பெண் : ஆசைக்கொரு ஆளானவன்…
ஆனந்தத்தில் கூத்தானவன்…
கோபியர்கள் நீராடிட…
கோலங்களை கண்டானவன்…
பெண் : ஆடை அள்ளி கொண்டானவன்…
அழகை அள்ளி தின்றானவன்…
போதையிலே நின்றானவன்…
பூஜைக்கின்று வந்தானவன்…
பெண் : அவன் உலா உலா உலா உலா…
தினம் தினம் பாரீர்…
தினம் விழா விழா விழா விழா…
வாழ்க்கையில் தேவை…
கண்ணா உன்னை நாள் தோறுமே…
கை கூப்பியே நான் பாடுவேன்…
பெண் : கோகுலத்து கண்ணா கண்ணா…
சீதை இவள்தானா…
மானும் இல்லை ராமன் இல்லை…
கோகுலத்தில் நானா…
ஆண் : சோகமில்லை சொந்தம் தேவை இல்லை…
ராவணின் நெஞ்சில் காமமில்லை…
கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே…
கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே…
—BGM—
ஆண் : ஆசைக்கொரு ஆளாகினான்…
கீதை என்னும் நூலாகினான்…
யமுனை நதி நீராடினான்…
பாண்டவர்க்கு போராடினான்…
ஆண் : ஆடை அள்ளி கொண்டாடினான்…
த்ரௌபதிக்கு தந்தாடினான்…
பெண்களுடன் கூத்தாடினான்…
பெண்ணை கண்டு கை கூப்பினான்…
ஆண் : ஒரு நிலா நிலா நிலா நிலா…
வந்தது நேரில்…
திருவிழா விழா விழா விழா…
ஆனது வீடே…
என் வாழ்க்கையே பிருந்தாவனம்…
நானாகவே நான் வாழ்கிறேன்…
ஆண் : கோகுலத்து கண்ணா கண்ணா…
லீலை விடுவாயா…
கோகுலத்தில் சீதை வந்தால்…
நீயும் வருவாயா…
ஆண் : ஆயிரம் பேர் உன்னை காதலித்தார்…
ருக்மணியை நீ கை பிடித்தாய்…
கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே…
ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே…
ஆண் : இந்த வீட்டுக்கு வந்தவள் ருக்மணியே…
இவள் வாழ்க்கைக்கு ஏற்ற பௌர்ணமியே…
இந்த வீட்டுக்கு வந்தவள் ருக்மணியே…
இவள் வாழ்க்கைக்கு ஏற்ற பௌர்ணமியே…
—BGM—
Notes : Gokulathu Kanna Song Lyrics in Tamil. This Song from Gokulathil Seethai (1996). Song Lyrics penned by Agathiyan. கோகுலத்து கண்ணா பாடல் வரிகள்.