பாடலாசிரியர் | பாடகர் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
யுகபாரதி | சைந்தவி | ஜி. வி. பிரகாஷ் குமார் | அசுரன் |
Ellu Vaya Pookalaye Song Lyrics in Tamil
—BGM—
பெண் : எள்ளு வயப் பூக்கலயே…
ஏறெடுத்தும் பாக்கலயே…
ஆலால ஒன் சிரிப்பு…
கொத்துதய்யா…
அச்சறுந்த ராட்டினம் போலச்…
சுத்துதய்யா…
பெண் : கொல்லையில வாழ எல…
கொட்டடியில் கோழிக்குஞ்சு…
அத்தனையும் உன் மொகத்த…
சொல்லுதய்யா… ஆ…
ஆடும் மாடும் வெறும் வாய…
மெள்ளுதய்யா…
பெண் : காத்தோட உன் வாசம்…
காடெல்லாம் ஒம் பாசம்…
ஊத்தாட்டம் ஒன் நெனப்பே…
ஊறுதய்யா… ஆ… ஆ…
சால்சாப்பு வேணாம்…
வந்து நில்லய்யா… ஆ…
சாவையும் கூறு போட்டுக்…
கொல்லய்யா… ஆ…
—BGM—
பெண் : கல்லாக நின்னாயோ…
கால் நோக நின்னாயோ…
கண்ணே…
நீ திரும்பி வரணும்…
வீட்டுக்கு…
பெண் : மல்லாந்து போனாலும்…
மண்ணோடு சாஞ்சாலும்…
அய்யா… நீ பெரும…
சாதி சனத்துக்கு…
பெண் : தலைச்சம் புள்ள இல்லாம…
சரிஞ்சது எத்தன ஆட்சி…
நீயே… எங்க ராசா…
வா வா களத்துக்கு…
தாயோட பாரம் மாசம்…
பத்தய்யா… ஆ…
தாங்காம நீயும் போனா…
தப்பய்யா… ஆ…
பெண் : எள்ளு வயப் பூக்கலயே…
ஏறெடுத்தும் பாக்கலயே…
ஆலால ஒன் சிரிப்பு…
கொத்துதய்யா… ஆ…
அச்சறுந்த ராட்டினம் போலச்…
சுத்துதய்யா… ஆ…
—BGM—
பெண் : வாள் ஏந்தி வந்தாலும்…
வாழாமச் செத்தாலும்…
கம்பீரம் கொறைஞ்சிடாத…
நெருப்பு நீ…
பெண் : அய்யோன்னு போனாலும்…
ஆகாசம் போனாலும்…
தண்ணீர கொளத்தில் சேர்க்கும்…
வரப்பு நீ…
பெண் : உழைக்க எண்ணுற ஆள…
உதைச்சி தள்ளுற ஊர…
கையக் கால…
வெட்டி வீசும்…
கருப்பு நீ…
காட்டேரி உன்னக் கண்டா…
ஓடாதோ… ஓ…
காப்பாத்த தெய்வம் வந்து…
சேராதோ…
பெண் : எள்ளு வயப் பூக்கலயே… ஏ…
ஏறெடுத்தும் பாக்கலயே…
ஆலால ஒன் சிரிப்புக்…
கொத்துதய்யா… ஆ…
அச்சறுந்த ராட்டினம் போலச்…
சுத்துதய்யா…
பெண் : கொல்லையில வாழ எல…
கொட்டடியில் கோழிக்குஞ்சு…
அத்தனையும் உன் மொகத்த…
சொல்லுதய்யா… ஆ…
ஆடும் மாடும் வெறும் வாய…
மெள்ளுதய்யா…
பெண் : காத்தோட உன் வாசம்…
காடெல்லாம் ஒம் பாசம்…
ஊத்தாட்டம் ஒன் நெனப்பே…
ஊறுதய்யா… ஆ… ஆ…
சால்சாப்பு வேணாம்…
வந்து நில்லய்யா… ஆ…
சாவையும் கூறு போட்டுக்…
கொல்லய்யா…
—BGM—
Notes : Ellu Vaya Pookalaye Song Lyrics in Tamil. This Song from Asuran (2019). Song Lyrics penned by Yugabharathi. எள்ளு வயப் பூக்கலயே பாடல் வரிகள்.