| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| வாலி | எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகி | இளையராஜா | பார்வதி என்னை பாரடி |
Chinna Poongili Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : சின்னப் பூங்கிளி சிந்தும் தேன் மொழி…
இனிக்கும் நன்நாள் இது…
வண்ணப் பூங்கொடி வந்ததோ மடி…
இணையும் பொன் நாள் இது…
ஆண் : சோலையோ நடுச் சாலையோ…
தேடினேன் உனையே…
காலையோ அந்தி மாலையோ…
ஏங்கினேன் இதயம் இனியும் சரணம்…
பெண் : சின்னப் பூங்கிளி சிந்தும் தேன் மொழி…
இனிக்கும் நன்நாள் இது…
வண்ணப் பூங்கொடி வந்ததோ மடி…
இணையும் பொன் நாள் இது…
—BGM—
ஆண் : ஆசை தீர பேச வேண்டும் பூங்காவிலே…
ஆயுள் காலம் யாவும் உன்னை நீங்காமலே…
பெண் : உன்னைச் சேர ஏங்கும் மாது…
எல்லைக் கோட்டை தாண்டாதா…
தென்றல் காற்றை தீண்டச் சொல்லி…
தென்னங்கீற்று வேண்டாதா…
ஆண் : வேண்டினால் விரல் தீண்டுமே…
தீண்டினால் சுகம் தோன்றுமே…
பெண் : தூங்குமோ இரு நேத்திரம்…
தாங்குமோ இதயம் இனியும் சரணம்…
ஆண் : சின்னப் பூங்கிளி சிந்தும் தேன் மொழி…
இனிக்கும் நன்நாள் இது…
பெண் : வண்ணப் பூங்கொடி வந்ததோ மடி…
இணையும் பொன் நாள் இது…
—BGM—
பெண் : காலை மாலை கேட்பது உந்தன் ஆலாபனம்…
காலம் தோறும் காண்பது உந்தன் ஆராதனம்…
ஆண் : உன்னைத் தீண்டும் கைகள்…
வேறு பெண்ணைத் தீண்டி வாழாது…
சங்கப் பாடல் என்றும் இங்கே…
சந்தம் நீங்கிப் போகாது…
பெண் : காதலே ஒரு காவியம்…
நீண்ட நாள் நிற்கும் ஓவியம்…
ஆண் : கண்மணி என்னைக் கூட வா…
நாள் எல்லாம் இதயம் இனியும் சரணம்…
பெண் : சின்னப் பூங்கிளி சிந்தும் தேன் மொழி…
இனிக்கும் நன்நாள் இது…
வண்ணப் பூங்கொடி வந்ததோ மடி…
இணையும் பொன் நாள் இது…
பெண் : சோலையோ நடுச் சாலையோ…
தேடினேன் உனையே…
காலையோ அந்தி மாலையோ…
ஏங்கினேன் இதயம் இனியும் சரணம்…
ஆண் : சின்னப் பூங்கிளி சிந்தும் தேன் மொழி…
இனிக்கும் நன்நாள் இது…
பெண் : வண்ணப் பூங்கொடி வந்ததோ மடி…
இணையும் பொன் நாள் இது…
Notes : Chinna Poongili Song Lyrics in Tamil. This Song from Parvathi Ennai Paradi (1993). Song Lyrics penned by Vaali. சின்னப் பூங்கிளி பாடல் வரிகள்.
