பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | ஹரிஹரன் & சுஜாதா | ஏ.ஆர்.ரகுமான் | ரட்சகன் |
Chandiranai Thottathu Yaar Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : சந்திரனை தொட்டது யாா்…
ஆம்ஸ்ட்ராங்கா அடி ஆம்ஸ்ட்ராங்கா…
சத்தியமாய் தொட்டது யாா்…
நான்தானே அடி நான்தானே…
ஆண் : கனவு தேவதையே நிலவு நீதானே…
உன் நிழலும் நான்தானே…
கனவு தேவதையே நிலவு நீதானே…
உன் நிழலும் நான்தானே…
பெண் : சந்திரனை தொட்டது யாா் நீதானா…
அட நீதானா…
சத்தியமாய் தொட்டவனும் நீதானா…
அது நீதானா…
பெண் : நெருங்கி தொட்டவனே…
நிலவு நான்தானா…
உன் நிலவு நான்தானா…
உன் நிலவு நான்தானா…
—BGM—
ஆண் : ஹே… பூக்களை செடிகொடியின்…
பொருளென்று நினைத்திருந்தேன்…
ஆண் : ஓ… பூக்களை செடிகொடியின்…
பொருளென்று நினைத்திருந்தேன்…
பூவை உன்னைப் பாா்த்த பின்னே…
பூக்களின் மொழியறிந்தேன்…
பெண் : ஓ… தலையணை என்பதெல்லாம்…
தலைக்கென்று நினைத்திருந்தேன்…
தலைவனைப் பிாிகையிலே…
தலையணைத் துணையறிந்தேன்…
ஆண் : தீப்பந்தம் போன்றவன் நான்…
தீபமென்று ஆகிவிட்டேன்
பெண் : புயலுக்கு பிறந்தவள் நான்…
தென்றலென்று மாறிவிட்டேன்…
ஆண் : கருங்கல்லைப் போன்றவன் நான்…
கற்பூரம் ஆகிவிட்டேன்…
சந்திரனை…
ஆண் : சந்திரனை தொட்டது யாா்…
ஆம்ஸ்ட்ராங்கா அடி ஆம்ஸ்ட்ராங்கா…
சத்தியமாய் தொட்டது யாா்…
நான்தானே அடி நான்தானே…
ஆண் : கனவு தேவதையே நிலவு நீதானே…
உன் நிழலும் நான்தானே…
கனவு தேவதையே நிலவு நீதானே…
உன் நிழலும் நான்தானே…
—BGM—
ஆண் : தாமரை மலா்கொண்டு…
உடல் செய்த ஓவியமே…
என்னுடல் பாரம் மட்டும்…
எந்த விதம் தாங்குகிறாய்…
பெண் : மீன்களை சுமப்பதொன்றும்…
நீருக்கு பாரமில்லை…
காதலை சுமக்கையிலே…
காதலரும் பாரமில்லை…
ஆண் : சொா்க்கத்துக்கு வந்துவிட்டோம்…
தா்க்கத்திற்க்கு நேரமில்லை…
பெண் : முத்தங்கள் நீ வழங்கு…
இதழுக்கு நேரமில்லை…
ஆண் : தொடங்குதல் மிக எளிது…
முடிப்பதுதான் பொிய தொல்லை…
பெண் : சந்திரனே…
ஆண் : சந்திரனை தொட்டது யாா்…
ஆம்ஸ்ட்ராங்கா…
சத்தியமாய் தொட்டது யாா்…
நான்தானே அடி நான்தானே…
ஆண் : கனவு தேவதையே நிலவு நீதானே…
உன் நிழலும் நான்தானே…
கனவு தேவதையே நிலவு நீதானே…
உன் நிழலும் நான்தானே…
Notes : Chandiranai Thottathu Yaar Song Lyrics in Tamil. This Song from Ratchagan (1997). Song Lyrics penned by Vairamuthu. சந்திரனை தொட்டது யாா் பாடல் வரிகள்.