Category Archives: தரமணி

Pavangalai Song Lyrics in Tamil

பாவங்களை சேர்த்துக்கொண்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்முகேஷ், செந்தில்தாஸ் & யுவன் ஷங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாதரமணி

Pavangalai Song Lyrics in Tamil


BGM

ஆண் : பாவங்களை சேர்த்துக்கொண்டு எங்கே செல்கிறோம்…
நாம் வாழ்ந்த வாழ்க்கை புரியாமல் மண்ணுக்குள் செல்கிறோம்…

குழு : என்னை மன்னிபாயா யா அல்லாஹ்…
மனம் உறுகி கேட்கிறேன் யா அல்லாஹ்…
இல்லை சோதிப்பாயா யா அல்லாஹ்…
நீயே கூறு அல்லாஹ்…

குழு : அல்ரகுமானே அல்ரஹிமின்…
நீதான் யா அல்லாஹ்…
நீ தான் யா அல்லாஹ்…

BGM

ஆண் : உயிரை நீ படைத்தது எதற்கு…
இதயமதில் துடிப்பது எதற்கு…
உன்னைத் தொழுது கேட்கிறேனே…
பாவங்களை அழிப்பவன் நீதானே…

ஆண் : உறக்கமில்லை இறக்கம் காட்டு…
இல்லை என் வலிகளை ஆற்று…
தவறு செய்தேன் தவறி செய்தேன்…
கருணையாலன் நீதான் அல்லாஹ்…

ஆண் : பாவங்களை சேர்த்துக்கொண்டு எங்கே செல்கிறோம்…
நாம் வாழ்ந்த வாழ்க்கை புரியாமல் மண்ணுக்குள் செல்லுகிறோம்…

குழு : என்னை மண்ணிப்பாயா யா அல்லாஹ்… ஓ…

BGM

ஆண் : நஞ்சினைப்போல நெஞ்சுக்குள் இருக்கும்…
குற்றம் கொல்கிறதே…
என் தொண்டைக்குழியில் உறுத்தும் முள்…
ஏதோ சொல்கிறதே…

ஆண் : நீ இருக்கும் இடந்தான் எது அல்லாஹ்…
அது மண்ணிக்கும் மனமே யா அல்லாஹ்…

குழு : வெறும் கழுகு கொத்தும் பிணமாக கிடந்தேன்…
யா அல்லாஹ்…
உன் அன்பை பெற நான் வேண்டுகிறேன்…
எல்லாம் நீ அல்லாஹ்…
எல்லாம் நீ அல்லாஹ்…

குழு : லாயிலாஹயில்லல்லா முகம்மதுரசூல்லல்லா…

ஆண் : இறைவா உன் இறக்கத்தினாலே…
ஈரமுடன் இருக்குது பூமி…
எரிந்து முடிந்த விளக்கில் இன்று…
வெளிச்சம் ஒன்று வந்தே ஒளிர்கிறதே…

ஆண் : நடுங்குகின்ற விரல்களைப் பிடித்து…
கருணையுடன் வெப்பத்தைக்கடத்து…
உனது அடிமை எங்கு போவேன்…
இருண்டுவிட்ட வானத்தின் விடியல் நீயே அல்லாஹ்…

குழு : காயங்களை கட்டிக்கொண்டு உன்னிடம் வந்துவிட்டேன்…
என் பாவம் யாவும் தூயவனே என்றோ மறந்துவிட்டேன்…

குழு : லாயில்லாஹா யில்லல்லா…
லாயில்லாஹா யில்லல்லா…
முகம்மது ரசூலல்லா…
சல்லல்லா ஹூலலைவசல்லம்…
முகம்மது ரசூலல்லா…
சல்லல்லாஹூ லலைவசல்லம்…
சல்லல்லாஹூ லலைவசல்லம்…
யா ரப்பி சல்ஹீ ஹூலலைவசல்லம்…


Notes : Pavangalai Song Lyrics in Tamil. This Song from Taramani (2017). Song Lyrics penned by Na Muthukumar. பாவங்களை சேர்த்துக்கொண்டு பாடல் வரிகள்.


உன் பதில் வேண்டி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சித்தார்த் & ஸ்ருதி எஸ்யுவன் ஷங்கர் ராஜாதரமணி

Unn Badhil Vendi Song Lyrics in Tamil


BGM

ஆண் : உன் பதில் வேண்டி…
யுகம் பல தாண்டி…
உன்மத்தம் கொண்டே காத்திருப்பேனோ…

ஆண் : உன்னிரு பார்வை விழுகின்ற தொலைவில்…
வாழ்கின்ற யோகம் நானடைவேனோ…

ஆண் : வழிப்போக்கனின் வாழ்விலே நிழலாக வருகிறாய்…
நான் கேட்கும் முன்னமே இளைப்பாற தருகிறாய்…
தருகிறாய் நீ…

ஆண் : இளைப்பாறல் முடிந்ததும் போதும் போ என்கிறாய்…
புலன் ஐந்தையும் கொல்கிறாய்…
கொல்கிறாய் நீ…

BGM

ஆண் : உனக்காக நானும் கடல் தாண்டி போவேன்…
மலைமேலொரு கடல் வேண்டுமா மழைக்கொண்டு செய்வேன்…
கடல் நீளம் சேர்த்து கனவள்ளி கோர்த்து…
என் மூச்சினை நூலாக்கியே நகை ஒன்று செய்வேன்…

ஆண் : யாரும் நம்பாத கதைகள்…
நீ சொல்லு பெண்ணே நிஜம் ஆக்கி வைப்பேன்…
வேறாரும் எங்கும் இல்லாத பூமி…
பார்க்காத வானம் நாம் வாழ போவோம்…

ஆண் : வழிப்போக்கனின் வாழ்விலே நிழலாக வருகிறாய்…
நான் கேட்கும் முன்னமே இளைப்பாறல் தருகிறாய்…
தருகிறாய் நீ…

ஆண் : இளைப்பாறல் முடிந்ததும் போதும் போ என்கிறாய்…
புலன் ஐந்தையும் கொல்கிறாய்…
கொல்கிறாய் நீ…

BGM

பெண் : வருகின்ற காற்றில் புதிதான வாசம்…
நொடி நேரத்தில் எனை மாற்றியே மாயங்கள் செய்தாய்…
எதிர் பார்த்த எல்லாம் கைவிட்டு போக…
பொய் என்பதா மெய் என்பதா கை நீட்டி வந்தாய்…

பெண் : காணல் நீரோடுதானே மீன் தேடிதானே…
நான் இன்று போனேன்…

ஆண் : குறை ஒன்றுமில்லை பிறைமீதும் கரைகள்…
உண்டென்று சொல்லி நீ இங்கு வந்தாய்…

ஆண் : வழிப்போக்கனின் வாழ்விலே நிழலாக வருகிறாய்…
நான் கேட்கும் முன்னமே இளைப்பாறல் தருகிறாய்…
தருகிறாய் நீ…

பெண் : விடியாதொரு நாளிலே அடடா என் வானிலே…
வெளிச்சம் போல் வருகிறாய் வாழ்க்கையே நீ…


Notes : Unn Badhil Vendi Song Lyrics in Tamil. This Song from Taramani (2017). Song Lyrics penned by Na Muthukumar. உன் பதில் வேண்டி பாடல் வரிகள்.


யாரோ உச்சி கிளை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்யுவன் ஷங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாதரமணி

Yaaro Ucchikilai Meley Song Lyrics in Tamil


BGM

ஆண் : யாரோ உச்சி கிளை மேலே…
குடைப்பிடித்தாரோ அது யாரோ…
பெரும் மழைக்காட்டை திறக்கும் தாழோ…

ஆண் : யாருமின்றி யாரும் இங்கு இல்லை…
இந்த பூமி மேலே…
தன்னந்தனி உயிர்கள் எங்குமில்லை…

ஆண் : பேரன்பின் ஆதி ஊற்று…
தரனனன்னே நன்னே நானா…
அதை தொட்டித்திறக்குது காற்று…
தரனன்னே நன்னே நானா…

ஆண் : அடி தரையில் வந்தது வானம்…
தரனன்னே நன்னே நானா…
இனி நட்சத்திரங்களின் காலம்…
தரனன்னே நன்னே நானா…

BGM

ஆண் : காட்டில் ஒரு குறு குறு பறவை…
சிறு சிறு சிறகை அசைக்கிறதே…
காற்றில் அதன் நடனத்தின் ஓசை…
கைகளை நீட்டி அழைக்கிறதே…

ஆண் : காலம் அது திரும்பவும் திரும்புது…
கால்கள் முன் ஜென்மத்தில் நுழையுது…

ஆண் : பெண்ணே நீ அருகினில் வர வர…
காயங்கள் தொலைகிறதே…

ஆண் : அடி கண்ணீரில் கண்கள் மறையும்போது…
நீ வந்தாயே…
உன் தோலில் நானும் சாயும்போது…
நீ என் தாயே…

BGM


Notes : Yaaro Ucchikilai Meley Song Lyrics in Tamil. This Song from Taramani (2017). Song Lyrics penned by Na Muthukumar. யாரோ உச்சி கிளை பாடல் வரிகள்.