Category Archives: ஒரு குப்பைக் கதை

ஒரு குப்பைக் கதை – Oru Kuppai Kathai (2015)

விலகாதே எனதுயிரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹரிசரண்ஜோஷ்வா ஸ்ரீதர்ஒரு குப்பைக் கதை

Vilagaadhe Enadhuyirae Song Lyrics in Tamil


BGM

ஆண் : விலகாதே எனதுயிரே…
விலகாதே எனதுயிரே…
நீ போனால் அடி பிரியாதோ எனதுயிரே…

ஆண் : பழகாமல் என் கிளியே…
பறக்காதே நீ வெளியே…
அடி நீ போனால் உடன் பிரியாதோ எனதுயிரே…

ஆண் : அன்பே அன்பே என் காதல் பொய்யில்லையே…
அன்பே அன்பே அதை சொல்ல வழியில்லையே…
அன்பே அன்பே நீ இன்றி நான் இல்லையே…
அட கடவுள் தந்த வரம் கையில் வந்தவுடன் பிரிந்து போகின்றதே…

ஆண் : விலகாதே எனதுயிரே…
விலகாதே எனதுயிரே…
நீ போனால் அடி பிரியாதோ எனதுயிரே…

ஆண் : பழகாமல் என் கிளியே…
பறக்காதே நீ வெளியே…
அடி நீ போனால் உடன் பிரியாதோ எனதுயிரே…

BGM

ஆண் : மானே ஏனோ உந்தன் மௌனம் புரியவில்லை…
உன்னை தேற்ற ஒரு மொழியும் கையிலில்லை…
ஆனால் உன் மேல் உள்ள காதலும் குறையவில்லை…

ஆண் : வழி தெரியாத ஒளி தெரியாத…
ஒரு வித காட்டில் மாட்டி கொண்டேன்…
என்னை அறியாமல் நீ செல்லும் போது காயம் கொண்டேனே…
காலம் என் காதல் உந்தன் காதில் சொல்லிடுமே…

ஆண் : அன்பே அன்பே என் காதல் பொய்யில்லையே…
அன்பே அன்பே அதை சொல்ல வழியில்லையே…
அன்பே அன்பே நீ இன்றி நான் இல்லையே…
அட கடவுள் தந்த வரம் கையில் வந்தவுடன் பிரிந்து போகின்றதே…

BGM

ஆண் : தனிமை தீவில் என் நாட்கள் ஓடுதடி…
பெண்ணே விழியில் உன் முகமே தெரியுதடி…
ஆஆ… ஒரு நாள் வருவாய் என்று எல்லாம் ஏங்குதடி…

ஆண் : சிறு பிள்ளை தவறை தாய் அறிவாலே…
அது போல் என்னை மன்னிப்பாயா…
இடைவெளி இன்னும் கூடிட நீயும் தண்டிப்பாயோ…
சொல்காலம் என் காதல் உந்தன் காதில் சொல்லிடுமே…

ஆண் : விலகாதே எனதுயிரே…
விலகாதே எனதுயிரே…
நீ போனால் அடி பிரியாதோ எனதுயிரே…

ஆண் : ஓஹோஓ… பழகாமல் என் கிளியே…
பறக்காதே நீ வெளியே…
அடி நீ போனால் உடன் பிரியாதோ எனதுயிரே… ஹோ ஓஓ…

BGM

ஆண் : எனதுயிரே…

BGM


Notes : Vilagaadhe Enadhuyirae Song Lyrics in Tamil. This Song from Oru Kuppai Kathai (2015). Song Lyrics penned by Na. Muthukumar. விலகாதே எனதுயிரே பாடல் வரிகள்.


மழை பொழிந்திடும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்மது ஐயர் & ஜோஷ்வா ஸ்ரீதர்ஜோஷ்வா ஸ்ரீதர்ஒரு குப்பைக் கதை

Mazhai Pozhindhidum Song Lyrics in Tamil


BGM

பெண் : மழை பொழிந்திடும் நேரம்…
மனதில் ஓர் ஈரம்…
இன்னும் என்ன தூரம்… ஆஹா ஆஆ…

பெண் : தீயென உன் மோகம்…
திரியென என் தாகம்…
தீ பற்றிடும் நேரம்… ஆஹா ஆஆ…

பெண் : ஒரு முறை ஒரு மயக்கம்…
மறுமுறை ஒரு தயக்கம்…
என்னை அது எரிக்கும்… ஆஹா ஆஆ…

பெண் : எது வரை இது போகும்…
அது வரை நாம் போவோம்…
ஒன்றென ஒன்றாவோம் வா வா வா வா…

ஆண் : இதயம் இரண்டும் உருகி இன்றது ஒன்றென மாற…
உயிர்கள் கலக்கும் பொன் மாலை நிமிடம்…
அடடா பெண்ணே பெண்ணே இனி நான் நான் என்ன கூற…
கடலில் விழும் நதியாய் காதல் சேர…

BGM

பெண் : எங்கே எனை ஈர்த்தாய் நான் அறியேன் அன்பே…
எப்படி என்னை சாய்த்தாய் இன்று நான் விழுந்தேன் அன்பே…
அச்சம் மடம் நாணம் அதை துறந்தேன் அன்பே…

பெண் : ஏனோ என்னுள்ளே ஏதோ ஆனதடா…
தானாய் உன் தோளில் சாய்கிறேன்…
மேகம் மேல் ஏறி நெஞ்சம் நீந்துதடா…
விண்மீன் கூட்டத்தில் நான் கலந்தேன்…

ஆண் : இதயம் இரண்டும் உருகி இன்றது ஒன்றென மாற…
உயிர்கள் கலக்கும் பொன் மாலை நிமிடம்…
அடடா பெண்ணே பெண்ணே இனி நான் நான் என்ன கூற…
கடலில் விழும் நதியாய் காதல் சேர…

BGM

ஆண் : காமம் மோகம் ஏக்கம் தாகம்…
துக்கம் போகும்… ஓஹோ ஓஓ…
தேகம் எங்கும் என்றும் வாடும் நேரம்…
தூரம் போகும்… ஓஹோ ஓஓ…

பெண் : மழை பொழிந்திடும்…
நேரம் மனதில் ஓர் ஈரம்…
இன்னும் என்ன தூரம்… ஆஹா ஆஆ…

பெண் : தீயென உன் மோகம்…
திரியென என் தாகம்…
தீ பற்றிடும் நேரம்… ஆஹா ஆஆ…

பெண் : ஒரு முறை ஒரு மயக்கம்…
மறுமுறை ஒரு தயக்கம்…
என்னை அது எரிக்கும்… ஆஹா ஆஆ…

பெண் : எது வரை இது போகும்…
அது வரை நாம் போவோம்…
ஒன்றென ஒன்றாவோம் வா வா வா வா…


Notes : Mazhai Pozhindhidum Song Lyrics in Tamil. This Song from Oru Kuppai Kathai (2015). Song Lyrics penned by Na. Muthukumar. மழை பொழிந்திடும் பாடல் வரிகள்.