Category Archives: ஊரு விட்டு ஊரு வந்து

Sorgame Endralum Song Lyrics in Tamil

சொர்க்கமே என்றாலும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்இளையராஜா & எஸ். ஜானகிஇளையராஜாஊரு விட்டு ஊரு வந்து

Sorgame Endralum Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹே தந்தன தந்தன தந்தா…

ஆண் : சொர்க்கமே என்றாலும்…
அது நம்மூரைப் போல வருமா…
அட என் நாடு என்றாலும்…
அது நம் நாட்டுக்கீடாகுமா…
பல தேசம் முழுதும் பேசும் மொழிகள்…
தமிழ் போல் இனித்திடுமா…

ஆண் : சொர்க்கமே என்றாலும்…
அது நம்மூரைப் போல வருமா…
அட என் நாடு என்றாலும்…
அது நம் நாட்டுக்கீடாகுமா…

BGM

பெண் : ஏரிக்கரை காத்தும்…
ஏலேலோ பாட்டும்…
இங்கே ஏதும் கேட்கவில்லையே…

ஆண் : பாடும் குயில் சத்தம்…
ஆடும் மயில் நித்தம்…
பார்க்க ஒரு சோலையில்லையே…

பெண் : வெத்தலைய மடிச்சு…
மாமன் அதைக் கடிச்சு…
துப்ப ஒரு வழியில்லையே…

ஆண் : ஓடி வந்து குதிச்சு…
முங்கி முங்கிக் குளிக்க…
ஆட ஒரு ஓடையில்லையே…

பெண் : இது ஊரு என்ன ஊரு…
நம்மூரு ரொம்ப மேலு…

ஆண் : அட ஓடும் பல காரு…
வீண் ஆடம்பரம் பாரு…

பெண் : ஒரு தாகம் தீர்க்க ஏது மோரு…

ஆண் : சொர்க்கமே என்றாலும்…
அது நம்மூரைப் போல வருமா…
அட என் நாடு என்றாலும்…
அது நம் நாட்டுக்கீடாகுமா…

பெண் : பல தேசம் முழுதும் பேசும் மொழிகள்…
தமிழ் போல் இனித்திடுமா…

பெண் : சொர்க்கமே என்றாலும்…
அது நம்மூரைப் போல வருமா…

ஆண் : அட என் நாடு என்றாலும்…
அது நம் நாட்டுக்கீடாகுமா…

BGM

ஆண் : மாடு கண்ணு மேய்க்க…
மேயிறதைப் பாா்க்க…
மந்தைவெளி இங்கே இல்லையே…

பெண் : ஆடு புலி ஆட்டம்…
போட்டு விளையாட…
அரச மரம் மேடை இல்லையே…

ஆண் : காளை ரெண்டு பூட்டி…
கட்ட வண்டி ஓட்டி…
கானம் பாட வழியில்லையே…

பெண் : தோழிகளை அழைச்சு…
சொல்லிச் சொல்லி ரசிச்சு…
ஆட்டம் போட முடியலையே…

ஆண் : ஒரு எந்திரத்தை போல…
அட இங்கு உள்ள வாழ்க்கை…

பெண் : இத எங்கே போயி சொல்ல…
மனம் இஷ்டப்படவில்லை…

ஆண் : நம்மூரைப் போல ஊரும் இல்லை…

பெண் : சொர்க்கமே என்றாலும்…
அது நம்மூரைப் போல வருமா…

ஆண் : அட என் நாடு என்றாலும்…
அது நம் நாட்டுக்கீடாகுமா…

பெண் : பல தேசம் முழுதும் பேசும் மொழிகள்…
தமிழ் போல் இனித்திடுமா…

ஆண் : சொர்க்கமே என்றாலும்…
ஆண் & பெண் : அது நம்மூரைப் போல வருமா…

ஆண் : அட என் நாடு என்றாலும்…
ஆண் & பெண் : அது நம் நாட்டுக்கீடாகுமா…

BGM


Notes : Sorgame Endralum Song Lyrics in Tamil. This Song from Ooru Vittu Ooru Vanthu (1990). Song Lyrics penned by Gangai Amaran. சொர்க்கமே என்றாலும் பாடல் வரிகள்.


தானா வந்த சந்தனமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாஊரு விட்டு ஊரு வந்து

Thaana Vantha Song Lyrics in Tamil


BGM

ஆண் : தானா வந்த சந்தனமே…
உன்ன தழுவ தினம் சம்மதமே…

பெண் : தானா வந்த சந்தனமே…
உன்ன தழுவ தினம் சம்மதமே…

ஆண் : இது வேறாரும் பறிக்காத மல்லிக தோட்டமே…
யாராலும் படிக்காத மங்கள ராகமே…

பெண் : இது வேறாரும் பறிக்காத மல்லிக தோட்டமே…
யாராலும் படிக்காத மங்கள ராகமே…

ஆண் : தானா வந்த சந்தனமே…
பெண் : உன்ன தழுவ தினம் சம்மதமே…

BGM

ஆண் : வண்ண வண்ண வளவி போட்டு…
வசமாக வளைச்சிப் போட்டு…
என்னைக் கட்டி இழுத்து போகும் இளந்தேகமே…

பெண் : கூறைபட்டு கலைஞ்சிடாம…
குறை ஏதும் நடந்திடாம…
ஆசைப்பட்டு அணைக்க வேணும் மகராசனே…

ஆண் : முன்ன பின்ன அறிஞ்சதில்ல…
முறையாக தெரிஞ்சதில்ல…
சின்ன சின்ன தவற நீயும் பொறுத்தாக வேணுமே…

பெண் : புத்தகத்தில் படிக்கவில்ல…
புரியாம நடிக்கவில்ல…
வித்தைகள வெவரமாக வெளியாக்க வேணுமே…

ஆண் : இந்த மேனி இன்பத் தோணி…
பெண் : ராணி இந்த ராணி…
இந்த ராஜனோட விருப்பமே…

ஆண் : தானா வந்த சந்தனமே…
உன்ன தழுவ தினம் சம்மதமே…

பெண் : இது வேறாரும் பறிக்காத மல்லிக தோட்டமே…
ஆண் : யாராலும் படிக்காத மங்கள ராகமே…

பெண் : தானா வந்த சந்தனமே…
உன்ன தழுவ தினம் சம்மதமே…

BGM

பெண் : முத்துநவ ரத்தினத்தோட…
முழுசான லட்சணத்தோட…
மெத்தையில நானும் கூட வர வேணுமே…

ஆண் : முன்னம் ரெண்டு பவளத்தோட…
முன்வாயில் மதுரத்தோட…
கண்ணனுக்கு காதல் விருந்து தர வேணுமே…

பெண் : தொட்டுத் தொட்டு சுகமும் கூட…
சுதியோடு கலந்து பாட…
விட்டு விட்டு விலகி ஓட முடியாம போகுமே…

ஆண் : கொத்துமல்லி கொண்டையிலாட…
குளிர் பார்வை வண்டுகளாட…
புத்தம் புது செண்டுகளாட புது தாகம் தோணுமே…

பெண் : செல்ல ராசா சொல்லு லேசா…
ஆண் : ராசா இந்த ராசா…
இந்த ராணியோட பொருத்தமே…

பெண் : தானா வந்த சந்தனமே…
உன்ன தழுவ தினம் சம்மதமே…

ஆண் : இது வேறாரும் பறிக்காத மல்லிக தோட்டமே…
பெண் : யாராலும் படிக்காத மங்கள ராகமே…

ஆண் : தானா வந்த சந்தனமே…
பெண் : உன்ன தழுவ தினம் சம்மதமே…


Notes : Thaana Vantha Song Lyrics in Tamil. This Song from Ooru Vittu Ooru Vanthu (1990). Song Lyrics penned by Gangai Amaran. தானா வந்த சந்தனமே பாடல் வரிகள்.