பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கங்கை அமரன் | எஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ரா | இளையராஜா | நினைவுச்சின்னம் |
Vaikasi Masathula Song Lyrics in Tamil
ஆண் : வைகாசி மாசத்துல பந்தல் ஒன்னு போட்டு…
ரெண்டு வாழை மரம் கட்டபோறேன்டி…
வைகாசி மாசத்துல பந்தல் ஒன்னு போட்டு…
ரெண்டு வாழை மரம் கட்டபோறேன்டி…
பெண் : பந்தல் ஒன்னு போட்டா போதுமா…
பொண்ணு கிண்ணு வேணாமா…
பந்தல் ஒன்னு போட்டா போதுமா…
பொண்ணு கிண்ணு வேணாமா…
ஆண் : பொண்ணில்லாத கல்யாணமா…
நீயில்லாமே நான் ஏதம்மா…
பொண்ணில்லாத கல்யாணமா…
நீயில்லாமே நான் ஏதம்மா…
ஆண் : வைகாசி மாசத்துல பந்தல் ஒன்னு போட்டு…
ரெண்டு வாழை மரம் கட்டபோறேன்டி…
ரெண்டு வாழை மரம் கட்டபோறேன்டி…
—BGM—
பெண் : மாப்பிள்ளை நீயில்லாமே மல்லிகை வாசமா…
தேடினால் பாடும்போது தென்றலும் வீசுமா…
ஆண் : ராத்திரி நீயில்லாமே தூக்கந்தான் கூடுமா…
பாயிலே சாஞ்சிங்கூட கண்ணுதான் மூடுமா…
பெண் : வாலிபத்தில் ஆசை வந்தா எல்லோருக்கும் வேதனை…
எட்டி நின்னு பேசு ராசா என்னத்துக்கு சோதனை…
ஆண் : ஒன்னோட நான் ஒண்ணாச் சேர…
நாளை எண்ணித் தவிக்கிறேன்…
ஆண் : வைகாசி…
ஹேய்… வைகாசி மாசத்துல பந்தல் ஒன்னு போட்டு…
ரெண்டு வாழை மரம் கட்டபோறேன்டி…
ரெண்டு வாழை மரம் கட்டபோறேன்டி…
—BGM—
ஆண் : வாங்குவேன் கூரைச்சேலை நல்லதோர் நாளிலே…
தாலிதான் மேலே ஏற தங்கம் என் தோளுலே…
பெண் : பால் பழம் நானும் ஏந்தி நீயுள்ள ரூமுல…
பார்த்து நான் வார போது என் மனம் தாங்கலே…
ஆண் : பால் பழம் தேவை இல்லை நீ இருக்கும் போதிலே…
பார்த்து பசி ஆறவில்லை வேறே ஏதும் தோணலே…
ஆண் : ஒண்ணுக்கொண்ணு ஏதேதோ பேசி…
ஊரை எல்லாம் மறக்கணும் மாருலேதான் கெடக்கணும்…
ஆண் : வைகாசி நெருங்கி வரும்…
வைகாசி மாசத்துல பந்தல் ஒன்னு போட்டு…
ரெண்டு வாழை மரம் கட்டபோறேன்டி…
ஹோய் வைகாசி மாசத்துல பந்தல் ஒன்னு போட்டு…
ரெண்டு வாழை மரம் கட்டபோறேன்டி…
பெண் : பந்தல் ஒன்னு போட்டா போதுமா…
பொண்ணு கிண்ணு வேணாமா…
பந்தல் ஒன்னு போட்டா போதுமா…
பொண்ணு கிண்ணு வேணாமா…
ஆண் : பொண்ணில்லாத கல்யாணமா…
நீயில்லாமே நான் ஏதம்மா…
பொண்ணில்லாத கல்யாணமா…
நீயில்லாமே நான் ஏதம்மா…
ஆண் : வைகாசி…
ஹேய்… வைகாசி மாசத்துல பந்தல் ஒன்னு போட்டு…
ரெண்டு வாழை மரம் கட்டபோறேன்டி…
ரெண்டு வாழை மரம் கட்டபோறேன்டி…
Notes : Vaikasi Masathula Song Lyrics in Tamil. This Song from Ninaivu Chinnam (1989). Song Lyrics penned by Gangai Amaran. வைகாசி மாசத்துல பாடல் வரிகள்.