பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
புலமைப்பித்தன் | மலேசியா வாசுதேவன் & பி.சுசீலா | கங்கை அமரன் | மண்ணுக்கேத்த பொண்ணு |
Poongatre Antha Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : பூங்காத்தே அந்த பொண்ணுகிட்ட ஒண்ணு சொல்லி வா…
தனியா அவ இல்லாம நெஞ்சம் வாடுதே…
பெண் : பூங்காத்தே என் ராசாகிட்ட என்னை கொண்டு போ…
மனமோ துணை இல்லாம இங்கே வாடுதே…
—BGM—
ஆண் : கண்ணகி வாழ்ந்த நாட்டுல வாழும்…
கன்னித் தமிழ் மண்ணுக்கேத்த பொண்ணு நீயம்மா…
ஆயிரம் ஜென்மம் நான் எடுத்தாலும்…
ஒன்னவிட்டு இன்னொரு பெண்ணை உள்ளம் ஏற்குமா…
பெண் : நம்மை பிரிக்கும் சக்தியே இங்கு எங்கும் இல்ல…
காத்த புடிச்சு கையில வைக்கும் ஆளும் இல்ல…
கட்டுக்காவல் மீறி ஆவல் ஓடுதே…
ஆண் : பூங்காத்தே அந்த பொண்ணுகிட்ட ஒண்ணு சொல்லி வா…
தனியா அவ இல்லாம நெஞ்சம் வாடுதே…
—BGM—
பெண் : தென் மலைக்காத்து வீசுற போது…
ஏழை பணக்காரன் என்று பார்ப்பதில்லையே…
நெஞ்சில காதல் பொங்குற போது…
ஜாதி மதம் பார்த்துக்கிட்டு பொங்கவில்லையே…
ஆண் : செல்வம் இருக்கும் வீட்டுல நல்ல உள்ளம் இல்ல…
உள்ளம் இருக்கும் வீட்டுல நல்ல செல்வம் இல்ல…
ஒரு காலம் வந்தா ஒண்ணா சேருவோம்…
பெண் : பூங்காத்தே என் ராசாகிட்ட என்னை கொண்டு போ…
மனமோ துணை இல்லாம இங்கே வாடுதே…
ஆண் : பூங்காத்தே அந்த பொண்ணுகிட்ட ஒண்ணு சொல்லி வா…
தனியா அவ இல்லாம நெஞ்சம் வாடுதே…
பெண் : துணை இல்லாம இங்கே வாடுதே…
ஆண் : அவ இல்லாம நெஞ்சம் வாடுதே…
Notes : Poongatre Antha Song Lyrics in Tamil. This Song from Mannukketha Ponnu (1985). Song Lyrics penned by Pulamaipithan. பூங்காத்தே பாடல் வரிகள்.