Category Archives: மண்ணுக்கேத்த பொண்ணு

மண்ணுக்கேத்த பொண்ணு – Mannukketha Ponnu (1985)

பூங்காத்தே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்மலேசியா வாசுதேவன் & பி.சுசீலாகங்கை அமரன்மண்ணுக்கேத்த பொண்ணு

Poongatre Antha Song Lyrics in Tamil


BGM

ஆண் : பூங்காத்தே அந்த பொண்ணுகிட்ட ஒண்ணு சொல்லி வா…
தனியா அவ இல்லாம நெஞ்சம் வாடுதே…

பெண் : பூங்காத்தே என் ராசாகிட்ட என்னை கொண்டு போ…
மனமோ துணை இல்லாம இங்கே வாடுதே…

BGM

ஆண் : கண்ணகி வாழ்ந்த நாட்டுல வாழும்…
கன்னித் தமிழ் மண்ணுக்கேத்த பொண்ணு நீயம்மா…
ஆயிரம் ஜென்மம் நான் எடுத்தாலும்…
ஒன்னவிட்டு இன்னொரு பெண்ணை உள்ளம் ஏற்குமா…

பெண் : நம்மை பிரிக்கும் சக்தியே இங்கு எங்கும் இல்ல…
காத்த புடிச்சு கையில வைக்கும் ஆளும் இல்ல…
கட்டுக்காவல் மீறி ஆவல் ஓடுதே…

ஆண் : பூங்காத்தே அந்த பொண்ணுகிட்ட ஒண்ணு சொல்லி வா…
தனியா அவ இல்லாம நெஞ்சம் வாடுதே…

BGM

பெண் : தென் மலைக்காத்து வீசுற போது…
ஏழை பணக்காரன் என்று பார்ப்பதில்லையே…
நெஞ்சில காதல் பொங்குற போது…
ஜாதி மதம் பார்த்துக்கிட்டு பொங்கவில்லையே…

ஆண் : செல்வம் இருக்கும் வீட்டுல நல்ல உள்ளம் இல்ல…
உள்ளம் இருக்கும் வீட்டுல நல்ல செல்வம் இல்ல…
ஒரு காலம் வந்தா ஒண்ணா சேருவோம்…

பெண் : பூங்காத்தே என் ராசாகிட்ட என்னை கொண்டு போ…
மனமோ துணை இல்லாம இங்கே வாடுதே…

ஆண் : பூங்காத்தே அந்த பொண்ணுகிட்ட ஒண்ணு சொல்லி வா…
தனியா அவ இல்லாம நெஞ்சம் வாடுதே…

பெண் : துணை இல்லாம இங்கே வாடுதே…
ஆண் : அவ இல்லாம நெஞ்சம் வாடுதே…


Notes : Poongatre Antha Song Lyrics in Tamil. This Song from Mannukketha Ponnu (1985). Song Lyrics penned by Pulamaipithan. பூங்காத்தே பாடல் வரிகள்.