பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ்.பி. சைலஜா | இளையராஜா | தாவணிக் கனவுகள் |
Oru Nayagan Song Lyrics in Tamil
—BGM—
பெண் : ஒரு நாயகன் உதயமாகிறான்…
ஊரார்களின் இதயமாகிறான்…
ஆண் : நினைத்ததை யார் முடிப்பவன் சொல்…
அவனிடம் நான் படித்தவன்தான்…
வாசல் தேடி வந்ததொரு வசந்த காலம்தான்…
குழு : தகுதுகு தகுதுகு தகுதுகு தகுதுகு தூ…
குழு : ஒரு நாயகன் உதயமாகிறான்…
ஊரார்களின் இதயமாகிறான்…
—BGM—
குழு : பூ மாலை புகழ் மாலை…
உனைத் தேடி வரும் வேளை…
ஆண் : அன்பும் நல்ல பண்பும்…
ரெண்டு கண் போல் காக்க வேண்டும்…
குழு : வா ராஜா வாவென்று…
வரவேற்பு தரும் வேளை…
ஆண் : பணிவும் சொல்லில் கனிவும் கொண்டு…
வாழ்த்தை ஏற்க வேண்டும்…
பெண் : இளைஞன் நல்ல கலைஞன்…
என்ற பேரை நீ வாங்கு…
ஆண் : லலலலலலா லா…
பெண் : நாளும் அந்த பேரால்…
இந்த ஊரை நீ வாங்கு…
ஆண் : ஒரு நாயகன் உதயமாகிறான்…
பெண் : ஊரார்களின் இதயமாகிறான்…
—BGM—
ஆண் : பள்ளியிலே பாடங்களை படிக்கணும்…
நல்ல புத்திசாலி பிள்ளையென நடக்கணும்…
ஆண் : சத்துணவு திட்டங்களும் எதுக்குடா…
ஏழை சந்ததியும் உயரனும் அதுக்குடா…
உழைக்கணும் உழைச்சி பிழைக்கணும்…
பிறர்க்கு உதவணும்…
குழு : இதை நீ ஒத்துக்கணும் கத்துக்கணும்…
ஆண் : அறிஞனா சிறந்த மனிதனா புரட்சி தலைவனா…
குழு : விளங்கும் காலம் வரும் நேரம் வரும்…
ஆண் : எங்க வீட்டு பிள்ளை என்று…
தாய்க் குலம்தான் உன்னைக் கண்டு…
எந்த நாளும் சொல்லும் வண்ணம்…
வள்ளல் போல வாழ வேணும்…
உள்ளங்களை ஆள வேணும்…
பெண் : ஒரு நாயகன் உதயமாகிறான்…
ஆண் : ஊரார்களின் இதயமாகிறான்…
—BGM—
ஆண் : மேலாடை மூடாமல் பாவாடை போடாமல்…
பொண்ணு ஒன்னு போனா…
கண்ணு பாக்கும் அட்ரஸ் கேட்கும்…
ஆண் : பூவும் வண்ண பொட்டு கொண்டு…
கொடி போல் நடை போடு…
குழு : லலலலாலாலா…
ஆண் : நாணம் குல மானம்…
தமிழ் பெண்ணின் பண்பாடு…
பெண் : ஒரு நாயகன் உதயமாகிறான்…
ஊரார்களின் இதயமாகிறான்…
ஆண் : நினைத்ததை யார் முடிப்பவன் சொல்…
அவனிடம் நான் படித்தவன்தான்…
வாசல் தேடி வந்ததொரு வசந்த காலம்தான்…
குழு : தகுதுகு தகுதுகு தகுதுகு தகுதுகு தூ…
ஆண் & பெண் : ஒரு நாயகன் உதயமாகிறான்…
ஊரார்களின் இதயமாகிறான்…
Notes : Oru Nayagan Song Lyrics in Tamil. This Song from Dhavani Kanavugal (1984). Song Lyrics penned by Vaali. ஒரு நாயகன் பாடல் வரிகள்.