Category Archives: ராமு

Kannan Vandhan Song Lyrics in Tamil

கண்ணன் வந்தான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்சீர்காழி கோவிந்தராஜன்எம்.எஸ்.விஸ்வநாதன்ராமு

Kannan Vandhan Song Lyrics in Tamil


ஆண் : நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு…
நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு…
பசிக்கு விருந்தாவான் நோய்க்கு மருந்தாவான்…
பரந்தாமன் சந்நிதிக்கு வாராய் நெஞ்சே…

BGM

ஆண் : கண்ணன் வந்தான்…
அங்கே கண்ணன் வந்தான்…
ஏழை கண்ணீரைக் கண்டதும்…
கண்ணன் வந்தான்…

ஆண் : கண்ணன் வந்தான்…
அங்கே கண்ணன் வந்தான்…
ஏழை கண்ணீரைக் கண்டதும்…
கண்ணன் வந்தான்… கண்ணன் வந்தான்… ஆ…

BGM

ஆண் : தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான்…
தீபம் ஒன்று கையில் கொண்டு கண்ணன் வந்தான்…
தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான்…
தீபம் ஒன்று கையில் கொண்டு கண்ணன் வந்தான்…

ஆண் : கேட்டவர்க்குக் கேட்டபடி கண்ணன் வந்தான்…
கேள்வியிலே பதிலாகக் கண்ணன் வந்தான்…
தருமம் என்னும் தேரில் ஏறிக் கண்ணன் வந்தான்…
தாளாத துயர் தீர்க்கக் கண்ணன் வந்தான்…

ஆண் : கண்ணன் வந்தான்…
மாயக் கண்ணன் வந்தான்…
கண்னன் வந்தான்…

ஆண் : கண்ணன் வந்தான்…
அங்கே கண்ணன் வ்ந்தான்…
ஏழை கண்ணீரைக் கண்டதும்…
கண்ணன் வந்தான்… கண்ணன் வந்தான்… ஆ…

BGM

ஆண் : முடவர்களை நடக்க வைக்கும் பிருந்தாவனம்…
மூடர்களை அறிய வைக்கும் பிருந்தாவனம்…
முடவர்களை நடக்க வைக்கும் பிருந்தாவனம்…
மூடர்களை அறிய வைக்கும் பிருந்தாவனம்…

ஆண் : குருடர்களைக் காண வைக்கும் பிருந்தாவனம்…
ஊமைகளைப் பேச வைக்கும் பிருந்தாவனம்…
குருடர்களைக் காண வைக்கும் பிருந்தாவனம்…
ஊமைகளைப் பேச வைக்கும் பிருந்தாவனம்…

ஆண் : அடையாத கதவிருக்கும் சந்நிதானம்…
அஞ்சாத சொல்லிருக்கும் சந்நிதானம்…
சந்நிதானம்… கண்ணன் சந்நிதானம்… சந்நிதானம்…

ஆண் : கண்ணன் வந்தான்…
அங்கே கண்ணன் வ்ந்தான்…
ஏழை கண்ணீரைக் கண்டதும்…
கண்ணன் வந்தான்… கண்ணன் வந்தான்… ஆ…

ஆண் : கண்ணா… ஆஆ… கண்ணா… கண்ணா…

BGM

ஆண் : கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும்…
காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும்…
கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும்…
காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும்…

ஆண் : கனி மழலைக் குரல் கொடுத்துப் பாட வேண்டும்…
கண் மறைந்த தாயும் அதைக் கேட்க வேண்டும்…
கனி மழலைக் குரல் கொடுத்துப் பாட வேண்டும்…
கண் மறைந்த தாயும் அதைக் கேட்க வேண்டும்…

ஆண் : கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா…
கருணையே அருள் செய்ய வருவாய் கண்ணா…
கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா…
கருணையே அருள் செய்ய வருவாய் கண்ணா…

ஆண் : கண்ணா… கண்ணா…
கண்ணா… கண்ணா…

குழு : கண்ணன் வந்தான்…
அங்கே கண்ணன் வந்தான்…
ஏழை கண்ணீரைக் கண்டதும்…
கண்ணன் வந்தான்… கண்ணன் வந்தான்… ஆ…


Notes : Kannan Vandhan Song Lyrics in Tamil. This Song from Ramu (1966). Song Lyrics penned by Kannadasan. கண்ணன் வந்தான் பாடல் வரிகள்.