பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | டி.எம்.சௌந்தரராஜன் & பி. சுசீலா | எம்.எஸ்.விஸ்வநாதன் | செல்வ மகள் |
Kuyilaga Naan Irundhenae Song Lyrics in Tamil
—BGM—
பெண் : குயிலாக நான் இருந்தென்ன…
குரலாக நீ வரவேண்டும்…
பாட்டாக நான் இருந்தென்ன…
பொருளாக நீ வர வேண்டும்…
வர வேண்டும்…
பெண் : குயிலாக நான் இருந்தென்ன…
குரலாக நீ வரவேண்டும்…
பாட்டாக நான் இருந்தென்ன…
பொருளாக நீ வர வேண்டும்…
வர வேண்டும்…
ஆண் : பாட்டோடு பொருள் இருந்தென்ன…
அரங்கேறும் நாள் வர வேண்டும்…
உன்னோடு அழகிருந்தென்ன…
என்னோடு நீ வரவேண்டும் வரவேண்டும்…
ஆண் : பாட்டோடு பொருள் இருந்தென்ன…
அரங்கேறும் நாள் வர வேண்டும்…
உன்னோடு அழகிருந்தென்ன…
என்னோடு நீ வரவேண்டும் வரவேண்டும்…
—BGM—
பெண் : செந்தாழை கூந்தலிலே…
செந்தூரம் நெற்றியிலே…
செவ்வாழை பந்தல் தேடி மங்கை வருவாள்…
ஆண் : கல்யாண மேளம் கொட்ட…
கண்பார்வை தாளம் தட்ட…
பெண் பாவை மாலை சூடும் மன்னன் வருவான்…
ஆண் : பாட்டோடு பொருள் இருந்தென்ன…
அரங்கேறும் நாள் வர வேண்டும்…
உன்னோடு அழகிருந்தென்ன…
என்னோடு நீ வரவேண்டும் வரவேண்டும்…
பெண் : குயிலாக நான் இருந்தென்ன…
குரலாக நீ வரவேண்டும்…
பாட்டாக நான் இருந்தென்ன…
பொருளாக நீ வர வேண்டும்…
வர வேண்டும்…
—BGM—
ஆண் : பொன்மேனி தேர் அசைய…
என் மேனி தாங்கிவர…
ஒன்றோடு ஒன்றாய் கூடும் காலமல்லவா…
பெண் : நில் என்று நாணம் சொல்ல…
செல் என்று ஆசை தள்ள…
நெஞ்சோடு நெஞ்சம் பாடும் பாடல் சொல்லவோ…
பெண் : குயிலாக நான் இருந்தென்ன…
குரலாக நீ வரவேண்டும்…
பாட்டாக நான் இருந்தென்ன…
பொருளாக நீ வர வேண்டும்…
வர வேண்டும்… வர வேண்டும்…
Notes : Kuyilaga Naan Irundhenae Song Lyrics in Tamil. This Song from Selva Magal (1967). Song Lyrics penned by Vaali. குயிலாக நான் இருந்தென்ன பாடல் வரிகள்.