Category Archives: கலங்கரை விளக்கம்

Kattruvaanga Ponen Song Lyrics in Tamil

காற்று வாங்க போனேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிடி.எம்.சௌந்தரராஜன்எம்.எஸ்.விஸ்வநாதன்கலங்கரை விளக்கம்

Kattruvaanga Ponen Song Lyrics in Tamil


BGM

ஆண் : காற்று வாங்க போனேன்…
ஒரு கவிதை வாங்கி வந்தேன்…

BGM

ஆண் : நான் காற்று வாங்க போனேன்…
ஒரு கவிதை வாங்கி வந்தேன்…
அதைக் கேட்டு வாங்கிப் போனாள்…
அந்தக் கன்னி என்னவானாள்…

ஆண் : நான் காற்று வாங்க போனேன்…
ஒரு கவிதை வாங்கி வந்தேன்…
அதைக் கேட்டு வாங்கி போனாள்…
அந்தக் கன்னி என்னவானாள்…

ஆண் : நான் காற்று வாங்க போனேன்…
ஒரு கவிதை வாங்கி வந்தேன்…

BGM

ஆண் : என் உள்ளம் என்ற ஊஞ்சல்…
அவள் உலவுகின்ற மேடை…
என் உள்ளம் என்ற ஊஞ்சல்…
அவள் உலவுகின்ற மேடை…

ஆண் : என் பார்வை நீந்தும் இடமோ…
அவள் பருவம் என்ற ஓடை…
என் பார்வை நீந்தும் இடமோ…
அவள் பருவம் என்ற ஓடை…

ஆண் : அவள் கேட்டு வாங்கிப் போனாள்…
அந்தக் கன்னி என்னவானாள்…

ஆண் : நான் காற்று வாங்க போனேன்…
ஒரு கவிதை வாங்கி வந்தேன்…

BGM

ஆண் : நடை பழகும்போது தென்றல்…
விடை சொல்லி கொண்டு போகும்…
நடை பழகும்போது தென்றல்…
விடை சொல்லி கொண்டு போகும்…

ஆண் : அந்த அழகு ஒன்று போதும்…
நெஞ்சை அள்ளிக் கொண்டு போகும்…
அந்த அழகு ஒன்று போதும்…
நெஞ்சை அள்ளிக் கொண்டு போகும்…

ஆண் : அவள் கேட்டு வாங்கிப் போனாள்…
அந்தக் கன்னி என்னவானாள்…

ஆண் : நான் காற்று வாங்க போனேன்…
ஒரு கவிதை வாங்கி வந்தேன்…

BGM

ஆண் : நல்ல நிலவு தூங்கும் நேரம்…
அவள் நினைவு தூங்கவில்லை…
நல்ல நிலவு தூங்கும் நேரம்…
அவள் நினைவு தூங்கவில்லை…

ஆண் : கொஞ்சம் விலகி நின்ற போதும்…
இந்த இதயம் தாங்கவில்லை…
கொஞ்சம் விலகி நின்ற போதும்…
இந்த இதயம் தாங்கவில்லை…

ஆண் : காற்று வாங்க போனேன்…
ஒரு கவிதை வாங்கி வந்தேன்…
அதைக் கேட்டு வாங்கிப் போனாள்…
அந்தக் கன்னி என்னவானாள்…

ஆண் : நான் காற்று வாங்க போனேன்…
ஒரு கவிதை வாங்கி வந்தேன்…


Notes : Kattruvaanga Ponen Song Lyrics in Tamil. This Song from Kalangarai Vilakkam (1965). Song Lyrics penned by Vaali. காற்று வாங்க போனேன் பாடல் வரிகள்.