பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கண்ணதாசன் | மலேசியா வாசுதேவன் & எஸ். ஜானகி | இளையராஜா | சட்டம் என் கையில் |
Aazhakkadalil Song Lyrics in Tamil
—BGM—
பெண் : ஆழக்கடலில் தேடிய முத்து…
ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு…
எங்க ராஜாக்கண்ணு…
ஆயிரத்தில் ஒன்னே ஒன்னு…
பெண் : ஆழக்கடலில் தேடிய முத்து…
ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு…
—BGM—
பெண் : மண்ணில் இட்டு பின்னல் இட்டு…
மச்சான் தந்த பிஞ்சு மொழி…
நெஞ்சில் ரெண்டு தொட்டில் கட்டி…
பால் குடிக்கும் வண்ணக்கிளி…
கோவிலில் ஏற்றினான் குத்துவிளக்கு…
கண்ணா ராஜா ஐயா சின்னய்யா…
பெண் : ஆழக்கடலில் தேடிய முத்து…
ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு…
எங்க ராஜாக்கண்ணு…
ஆயிரத்தில் ஒன்னே ஒன்னு…
பெண் : ஆழக்கடலில் தேடிய முத்து…
ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு…
—BGM—
ஆண் : வெள்ளி அலை நீச்சல் இட்டு…
கட்டுமரம் சென்றால் என்ன… ஹே…
ஆண் : பெற்றெடுத்த பிள்ளை முகம்…
நெஞ்சைவிட்டு செல்லாதம்மா…
ஓடம் நான் தென்றல் நீ என்னை நடத்து…
கண்ணே பொன்னே அம்மா சின்னம்மா…
ஆண் : ஆழக்கடலில் தேடிய முத்து…
ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு…
எங்க ராஜாக்கண்ணு…
ஆயிரத்தில் ஒன்னே ஒன்னு…
ஆண் : ஆழக்கடலில் தேடிய முத்து…
ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு…
—BGM—
பெண் : சிப்பிக்குள்ளே முத்து வச்சு…
உன்னை தந்த அப்பா கண்ணே…
ஆண் : சிப்பியிலும் தங்க சிப்பி…
உன்னை பெத்த அம்மா கண்ணே…
ஆண் & பெண் : நீந்தினோம் மூழ்கினோம் உன்னை எடுக்க…
கண்ணா ராஜா ஐயா சின்னய்யா…
ஆண் & பெண் : ஆழக்கடலில் தேடிய முத்து…
ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு…
எங்க ராஜாக்கண்ணு…
ஆயிரத்தில் ஒன்னே ஒன்னு…
ஆண் & பெண் : ஆழக்கடலில் தேடிய முத்து…
ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு…
Notes : Aazhakkadalil Song Lyrics in Tamil. This Song from Sattam En Kaiyil (1978). Song Lyrics penned by Kannadasan. ஆழக்கடலில் பாடல் வரிகள்.