பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | சுவர்ணலதா | தேவா | பாஞ்சாலங்குறிச்சி |
Aathoram Thopukule Song Lyrics in Tamil
பெண் : ஆத்தோரம் தோப்புக்குள்ள அத்தானை சந்திக்கத்தான்…
ஆசை வச்சேன்…
ஆளான சேதி சொல்லி அடையாளம் காட்டத்தானே…
ஆசை வச்சேன்…
பெண் : கனகாம்பரம் எடுத்து கையால நீ தொடுத்து…
பின்னால வச்சிவிட ஆசை வச்சேன்…
மரியாதை இல்லாம மச்சானே உன்னை பேசி…
மாரோட மல்லுக்கட்ட ஆசை வச்சேன்…
பெண் : அத்தனையும் பொய்யாச்சு ராசா…
ஒத்தையில நிக்குதிந்த ரோசா…
—BGM—
பெண் : மாரளவு தண்ணியில மஞ்ச தேய்ச்சு நான் குளிக்க…
மறைஞ்சிருந்து நீயும் பாக்க ஆசை வச்சேன்…
—BGM—
பெண் : பசுவப்போல மெல்ல வந்து கொசுவத்தையும் நீ இழுத்து…
குசும்பு பண்ண வேணுமின்னு ஆசை வச்சேன்…
—BGM—
பெண் : உள்ளூரு சந்தையில எல்லாரும் பாக்கையில…
கண்டாங்கி வாங்கித்தர ஆசை வச்சேன்…
—BGM—
பெண் : குத்தாத முள்ளு குத்தி குதிகாலு வலிக்குதுன்னு…
மடி மேல காலைப்போட ஆசை வச்சேன்…
—BGM—
பெண் : அத்தனையும் பொய்யாச்சு ராசா…
ஒத்தையில நிக்குதிந்த ரோசா…
பெண் : ஆத்தோரம் தோப்புக்குள்ள அத்தானை சந்திக்கத்தான்…
ஆசை வச்சேன்…
ஆளான சேதி சொல்லி அடையாளம் காட்டத்தானே…
ஆசை வச்சேன்…
—BGM—
பெண் : மேகாட்டு மூலையில மேகம் கருக்கையிலே…
சுக்குத்தண்ணி வச்சித்தர ஆசை வச்சேன்…
—BGM—
பெண் : மச்சும் குளிருகிற மார்கழி மாசத்துல…
மச்சானை தொட்டுத்தூங்க ஆசை வச்சேன்…
—BGM—
பெண் : மாமன் கட்டும் வேட்டியில மஞ்சக்கறை என்னதுன்னு…
மந்தையில நின்னு சொல்ல ஆசை வச்சேன்…
—BGM—
பெண் : ரெட்டிகுளம் ஆசாரிக்கு பொட்டியில பணம் கொடுத்து…
ரெட்டைத்தொட்டில் செய்யச்சொல்ல ஆசை வச்சேன்…
பெண் : அத்தனையும் பொய்யாச்சு ராசா…
ஒத்தையில நிக்குதிந்த ரோசா…
பெண் : அத்தானின் இடுப்புக்கு அண்ணாக்கயிறு கட்ட…
ஆசை வச்சேன்…
நறுக்கான தேகத்துக்கு நல்லெண்ணெய் தேய்சுவிட…
ஆசை வச்சேன்…
பெண் : வெந்நீரை கொதிக்க வச்சு மச்சானை குளிக்க வச்சு…
மாராப்பு நனையத்தானே ஆசை வச்சேன்…
மாந்தோப்பில் கட்டிலிட்டு மனம் போல தொட்டுத்தொட்டு…
மாமன் கூட பேசிடத்தான் ஆசை வச்சேன்…
பெண் : அத்தனையும் பொய்யாச்சு ராசா…
ஒத்தையில நிக்குதிந்த ரோசா…
பெண் : ஆத்தோரம் தோப்புக்குள்ள அத்தானை சந்திக்கத்தான்…
ஆசை வச்சேன்…
ஆளான சேதி சொல்லி அடையாளம் காட்டத்தானே…
ஆசை வச்சேன்…
Notes : Aathoram Thopukule Song Lyrics in Tamil. This Song from Panchalankurichi (1996). Song Lyrics penned by Vairamuthu. ஆத்தோரம் தோப்புக்குள்ள பாடல் வரிகள்.