ஆசையிலே பாத்தி கட்டி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்பி. சுசீலாஇளையராஜாஎங்க ஊரு காவல்காரன்

Aasayilae Paathikatti Song Lyrics in Tamil


பெண் : தென்பாண்டிச் சீமை தெம்மாங்கு பாட்டு…
பாட்டோடு வாழும் என் சாமியே…
உன் பேர போட்டு நான் பாடும் பாட்டு…
கேட்டாக்கா வாழும் உன் பூமியே…
என் மூச்சு என் பேச்சு நீதானயா…
என் வாக்கு நீ கேட்டு காப்பத்தையா…

பெண் : ஆசையிலே பாத்திகட்டி நாத்து ஒண்ணு…
நட்டு வச்சேன் நான் பூவாயி…
ஆதரவைத் தேடி ஒரு பாட்டு ஒண்ணு…
கட்டி வச்சேன் நான் பூவாயி…

பெண் : நானா பாடலயே நீதான் பாட வச்ச…
நானா பாடலயே நீதான் பாட வச்ச…

பெண் : ஆசையிலே பாத்தி கட்டி நாத்து ஒண்ணு…
நட்டு வச்சேன் நான் பூவாயி…

BGM

பெண் : வைகையிலே வந்த வெள்ளம்…
நெஞ்சிலே வந்ததென்ன…
வஞ்சி நான் கேட்ட வரம்…
வந்து நீ தந்ததென்ன…

பெண் : சின்ன பூ பாத்து சேர்ந்ததே காத்து…
சிந்துதான் பாடுது…

பெண் : பொன்னுமணித் தேரு…
நான் பூட்டி வச்சேன் பாரு…
கன்னி என்னைத் தேடி…
நீ அங்க வந்து சேரு…

பெண் : விதை போட்டேன் அது விளைஞ்சாச்சு…
நீ வாயேன் வழி பாத்து…

பெண் : ஆசையிலே பாத்தி கட்டி நாத்து ஒண்ணு…
நட்டு வச்சேன் நான் பூவாயி…

பெண் : ஆதரவைத் தேடி ஒரு பாட்டு ஒண்ணு…
கட்டி வச்சேன் நான் பூவாயி…

BGM

பெண் : கண்ணுதான் தூங்கவில்ல…
காரணம் தோணவில்ல…
பொண்ணு நான் ஜாதி முல்ல…
பூமாலை ஆகவில்ல…

பெண் : கன்னி நான் நாத்து…
கண்ணன் நீ காத்து…
வந்துதான் கூடவில்ல…

பெண் : கூறைப் பட்டு சேலை…
நீ வாங்கி வரும் வேளை…
போடு ஒரு மாலை…
நீ சொல்லு அந்த நாளை…

பெண் : ஏஞ்சாமி நான் காத்திருக்கேன்…
என்னை ஏந்த நீதானே…

பெண் : ஆசையிலே பாத்தி கட்டி நாத்து ஒண்ணு…
நட்டு வச்சேன் நான் பூவாயி…
ஆதரவைத் தேடி ஒரு பாட்டு ஒண்ணு…
கட்டி வச்சேன் நான் பூவாயி…

பெண் : நானா பாடலயே நீதான் பாட வச்ச…
நானா பாடலயே நீதான் பாட வச்ச…

பெண் : ஆசையிலே பாத்தி கட்டி நாத்து ஒண்ணு…
நட்டு வச்சேன் நான் பூவாயி…


Notes : Aasayilae Paathikatti Song Lyrics in Tamil. This Song from Enga Ooru Kavalkaran (1988). Song Lyrics penned by Gangai Amaran. ஆசையிலே பாத்தி கட்டி பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top