பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கங்கை அமரன் | பி. சுசீலா | இளையராஜா | எங்க ஊரு காவல்காரன் |
Aasayilae Paathikatti Song Lyrics in Tamil
பெண் : தென்பாண்டிச் சீமை தெம்மாங்கு பாட்டு…
பாட்டோடு வாழும் என் சாமியே…
உன் பேர போட்டு நான் பாடும் பாட்டு…
கேட்டாக்கா வாழும் உன் பூமியே…
என் மூச்சு என் பேச்சு நீதானயா…
என் வாக்கு நீ கேட்டு காப்பத்தையா…
பெண் : ஆசையிலே பாத்திகட்டி நாத்து ஒண்ணு…
நட்டு வச்சேன் நான் பூவாயி…
ஆதரவைத் தேடி ஒரு பாட்டு ஒண்ணு…
கட்டி வச்சேன் நான் பூவாயி…
பெண் : நானா பாடலயே நீதான் பாட வச்ச…
நானா பாடலயே நீதான் பாட வச்ச…
பெண் : ஆசையிலே பாத்தி கட்டி நாத்து ஒண்ணு…
நட்டு வச்சேன் நான் பூவாயி…
—BGM—
பெண் : வைகையிலே வந்த வெள்ளம்…
நெஞ்சிலே வந்ததென்ன…
வஞ்சி நான் கேட்ட வரம்…
வந்து நீ தந்ததென்ன…
பெண் : சின்ன பூ பாத்து சேர்ந்ததே காத்து…
சிந்துதான் பாடுது…
பெண் : பொன்னுமணித் தேரு…
நான் பூட்டி வச்சேன் பாரு…
கன்னி என்னைத் தேடி…
நீ அங்க வந்து சேரு…
பெண் : விதை போட்டேன் அது விளைஞ்சாச்சு…
நீ வாயேன் வழி பாத்து…
பெண் : ஆசையிலே பாத்தி கட்டி நாத்து ஒண்ணு…
நட்டு வச்சேன் நான் பூவாயி…
பெண் : ஆதரவைத் தேடி ஒரு பாட்டு ஒண்ணு…
கட்டி வச்சேன் நான் பூவாயி…
—BGM—
பெண் : கண்ணுதான் தூங்கவில்ல…
காரணம் தோணவில்ல…
பொண்ணு நான் ஜாதி முல்ல…
பூமாலை ஆகவில்ல…
பெண் : கன்னி நான் நாத்து…
கண்ணன் நீ காத்து…
வந்துதான் கூடவில்ல…
பெண் : கூறைப் பட்டு சேலை…
நீ வாங்கி வரும் வேளை…
போடு ஒரு மாலை…
நீ சொல்லு அந்த நாளை…
பெண் : ஏஞ்சாமி நான் காத்திருக்கேன்…
என்னை ஏந்த நீதானே…
பெண் : ஆசையிலே பாத்தி கட்டி நாத்து ஒண்ணு…
நட்டு வச்சேன் நான் பூவாயி…
ஆதரவைத் தேடி ஒரு பாட்டு ஒண்ணு…
கட்டி வச்சேன் நான் பூவாயி…
பெண் : நானா பாடலயே நீதான் பாட வச்ச…
நானா பாடலயே நீதான் பாட வச்ச…
பெண் : ஆசையிலே பாத்தி கட்டி நாத்து ஒண்ணு…
நட்டு வச்சேன் நான் பூவாயி…
Notes : Aasayilae Paathikatti Song Lyrics in Tamil. This Song from Enga Ooru Kavalkaran (1988). Song Lyrics penned by Gangai Amaran. ஆசையிலே பாத்தி கட்டி பாடல் வரிகள்.