பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கங்கை அமரன் | மனோ & பி. சுசீலா | இளையராஜா | எங்க ஊரு காவல்காரன் |
Maala Karukkaliley Song Lyrics in Tamil
பெண் : நல்லாருக்குது ஊரு…
இது உண்டாக்கினது யாரு…
குழு : தந்தனதனத் தானா தன தந்தனதனத் தானா…
பெண் : எல்லோருக்கும் ஒரு சாமி…
இது சாமி கொடுத்த பூமி…
குழு : தந்தனதனத் தானா தன தந்தனதனத் தானா…
பெண் : வாரிக் கொடுக்கும் சாமி பேரு மாரி…
குழு : அட தான தந்தன தான தந்தன தானா…
பெண் : அவ பேர படிக்க ஊரு செழிக்கும் ஏரி…
குழு : அட தான தந்தன தான தந்தன தானா…
—BGM—
ஆண் : மாலைக் கருக்கலிலே…
அந்த மல்லிகை தோட்டத்திலே…
மாலைக் கருக்கலிலே…
அந்த மல்லிகை தோட்டத்திலே…
ஆண் : சேலை உடுத்தன சோலை உனக்கொரு…
மாலை இருக்கு புள்ள…
ஓலை திருமண ஓலை கொடுத்திட…
வேளை வருதுப்புள்ள…
பெண் : மாலைக் கருக்கலிலே…
அந்த மல்லிகை தோட்டத்திலே…
மாலைக் கருக்கலிலே…
அந்த மல்லிகை தோட்டத்திலே…
—BGM—
ஆண் : நீயும் நானும் ஒண்ணு…
கேளு கேளு கண்ணு…
ராகம் தாளம் போல…
சேர போறோம் ஒண்ணு…
பெண் : சொந்தமிப்போ வந்ததில்லை…
சோகங்களே கண்டதில்லை…
சொக்கி மடியில நான் விழும்போதுல…
சொர்க்கம் இது போல் என்றுமில்லை…
ஆண் : கண்ணுல தூக்கமில்ல…
காரணம் கூறுபுள்ள…
நெஞ்சிலே நான் விழுந்தேன்…
எண்ணமோ மீளவில்லை…
பெண் : நேரம் முழுவதும் நெஞ்சிலிருப்பது…
நீதானே வேறில்ல…
ஆண் : மாலைக் கருக்கலிலே…
அந்த மல்லிகை தோட்டத்திலே…
பெண் : மாலைக் கருக்கலிலே…
அந்த மல்லிகை தோட்டத்திலே…
—BGM—
பெண் : வேற ஜாதி முல்லை…
நானும் கன்னிபுள்ள…
பாதை மாறவில்ல…
பேதம் ஊருக்குள்ள…
ஆண் : ஆயிரம்தான் சொல்லட்டுமே…
வேலி ஒண்ணு கட்டட்டுமே…
அன்பு மனங்களும் ஒண்ணு கலந்தது…
ஆசை இது போல் வாழட்டுமே…
பெண் : நெஞ்சிலே சாஞ்சிகிட்டா நிம்மதி தேறுமையா…
நித்தமும் உன் மடிதான் பொண்ணுக்கு போதுமய்யா…
ஆண் : நூறு தலைமுறை வாழும் வழிமுறை…
நாம் காப்போம் பூவாயி…
பெண் : மாலைக் கருக்கலிலே…
அந்த மல்லிகை தோட்டத்திலே…
மாலைக் கருக்கலிலே…
அந்த மல்லிகை தோட்டத்திலே…
ஆண் : சேலை உடுத்தன சோலை உனக்கொரு…
மாலை இருக்கு புள்ள…
ஓலை திருமண ஓலை கொடுத்திட…
வேளை வருதுப்புள்ள…
பெண் : மாலைக் கருக்கலிலே…
அந்த மல்லிகை தோட்டத்திலே…
ஆண் : மாலைக் கருக்கலிலே…
அந்த மல்லிகை தோட்டத்திலே…
Notes : Maala Karukkaliley Song Lyrics in Tamil. This Song from Enga Ooru Kavalkaran (1988). Song Lyrics penned by Gangai Amaran. மாலைக் கருக்கலிலே பாடல் வரிகள்.