ஏன் பெண்ணென்று

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபி. உன்னிகிருஷ்ணன்ஷிவாலவ் டுடே

Yen Pennendru Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஏன் பெண்ணென்று பிறந்தாய்…
ஏன் என் கண்ணில் விழுந்தாய்…
ஏன் ஒரு பாதி சிரித்தாய்…
என் உயிர் பூவை எரித்தாய்…

ஆண் : முதல் நாள் பார்த்தாய்…
உறக்கம் கெடுத்தாய்…
முறையா என்றேன்…
கண்கள் பறித்தாய்…

ஆண் : என் வலி தீர…
ஒரு வழி என்ன…
என் பனிப் பூவே…
மீண்டும் பார்த்தால் என்ன…

ஆண் : ஏன் பெண்ணென்று பிறந்தாய்…
ஏன் என் கண்ணில் விழுந்தாய்…

BGM

ஆண் : நீ சூடும் ஒரு பூ தந்தால்…
என் ஆஸ்தி எல்லாம் கொடுப்பேன்…
உன் வாயால் என் பேர் சொன்னால்…
உன் காலடியில் கிடப்பேன்…

ஆண் : தூக்கத்தை தொலைத்தேனே…
துடிக்குது நெஞ்சம்…
தலை போன சேவல் போல்…
தவிக்குது அங்கம்…

ஆண் : இரண்டில் ஒன்று சொல்லிவிடு…
இல்லை நீயே கொள்ளியிடு…

ஆண் : ஏன் பெண்ணென்று பிறந்தாய்…
ஏன் என் கண்ணில் விழுந்தாய்…

BGM

ஆண் : நோகாமல் பிறர் காணாமல்…
உந்தன் ஆடை நுனி தொடுவேன்…
என்ன ஆனாலும் உயிர் போனாலும்…
ஒரு தென்றல் என்றே வருவேன்…

ஆண் : நீ என்னைப் பார்த்தால்தான்…
துடிக்குது உள்ளம்…
நீ என்னைப் பிரிந்தாலோ…
உள்ளம் வெறும் பள்ளம்…

ஆண் : இமயம் கேட்கும் என் துடிப்பு…
ஏனோ உனக்குள் கதவடைப்பு…

ஆண் : ஏன் பெண்ணென்று பிறந்தாய்…
ஏன் என் கண்ணில் விழுந்தாய்…
ஏன் ஒரு பாதி சிரித்தாய்…
என் உயிர் பூவை எரித்தாய்…

ஆண் : முதல் நாள் பார்த்தாய்…
உறக்கம் கெடுத்தாய்…
முறையா என்றேன்…
கண்கள் பறித்தாய்…

ஆண் : என் வலி தீர…
ஒரு வழி என்ன…
என் பனிப் பூவே மீண்டும்…
பார்த்தால் என்ன…

ஆண் : ஏன் பெண்ணென்று பிறந்தாய்…
ஏன் என் கண்ணில் விழுந்தாய்…


Notes : Yen Pennendru Song Lyrics in Tamil. This Song from Love Today (1997). Song Lyrics penned by Vairamuthu. ஏன் பெண்ணென்று பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading