பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | குமரன் & சுர்முகி ராமன் | பரத்வாஜ் | அசல் |
Yea Dushyantha Song Lyrics in Tamil
—BGM—
பெண் : ஏ துஷ்யந்தா… ஏ துஷ்யந்தா…
உன் சகுந்தலா தேடி வந்தா…
ஏ… துஷ்யந்தா நீ மறந்ததை…
உன் சகுந்தலா மீண்டும் தந்தா…
ஆண் : கள்ள பெண்ணே…
என் கண்ணை கேட்கும் கண்ணே…
என் கற்பை திருடும் முன்னே…
நான் தப்பை விட்டு தப்பி வந்தேன்…
ஆண் : மீண்டும் நீ நேரில் வந்து நின்றாய்…
என் நெஞ்சை கொத்தி தின்றாய்…
எனக்கு உன்னை நினைவில்லையே…
பெண் : பூங்காவில் மழை வந்ததும்…
புதர் ஒன்று குடை ஆனதும்…
மழை வந்து நனைக்காமலே…
மடி மட்டும் நனைந்ததை மறந்தது என்ன கதை…
பெண் : ஏ துஷ்யந்தா… ஏ துஷ்யந்தா…
உன் சகுந்தலா தேடி வந்தா…
—BGM—
பெண் : அழகான பூக்கள் பூக்கும்…
தேன் ஆற்றங்கரையில்…
அடையாளம் தெரியாத ஆல மர இருட்டில்…
—BGM—
பெண் : இருள் கூட அறியாத…
இன்பங்களின் முகத்தில்…
இரு பேரும் கைதானோம் முத்தங்களின் திருட்டில்…
பெண் : வருடித் தந்தாய் மனதை…
திருடி கொண்டாய் வயதை…
அது கிளையோடு வேர்களும் பூத்த கதை…
பெண் : ஆளாலன் காட்டுக்குள்…
ஒரு ஓட்டு வீட்டுக்குள்ளே…
உன்னை போர்த்து கொண்டு படுத்தேன்…
பெண் : பாலாற்றில் நீராடும் போது…
துவட்ட துண்டு இல்லை…
கூந்தல் கொண்டு உன்னை துடைத்தேன்…
பெண் : அந்த நீல நதிக்கரை ஓரம்…
நீ நின்றிருந்தாய் நொடி நேரம்…
நான் பாடி வந்தேன் ஒரு ராகம்…
நாம் பழகி வந்தோம் சில காலம்…
பெண் : ஏ துஷ்யந்தா… ஏ துஷ்யந்தா…
உன் சகுந்தலா தேடி வந்தா…
பெண் : பார்த்த ஞாபகம் இல்லையோ…
பருவ நாடகம் தொல்லையோ…
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ…
மறந்ததே இந்த நெஞ்சமோ…
—BGM—
பெண் : ஏ துஷ்யந்தா… ஏ துஷ்யந்தா…
ஏ துஷ்யந்தா… ஏ துஷ்யந்தா…
Notes : Yea Dushyantha Song Lyrics in Tamil. This Song from Aasal (2010). Song Lyrics penned by Vairamuthu. ஏ துஷ்யந்தா பாடல் வரிகள்.