பாடலாசிரியர் | பாடகர் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | ரமேஷ் விநாயகம் | ரமேஷ் விநாயகம் | அழகிய தீயே |
Vizhigalin Aruginil Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : விழிகளின் அருகினில் வானம்…
வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்…
இது ஐந்து புலன்களின் ஏக்கம்…
என் முதல் முதல் அனுபவம்… ஓ… யே…
—BGM—
ஆண் : ஒலியின்றி உதடுகள் பேசும்…
பெறும் புயலென வெளிவரும் சுவாசம்…
ஒரு சுவடின்றி நடந்திடும் பாதம்…
இது அதிசய அனுபவம்… ஓ… யே…
—BGM—
ஆண் : பெண்ணை சந்தித்தேன்…
அவள் நட்பை யாசித்தேன்…
அவள் பண்பை நேசித்தேன்…
வேறென்ன நான் சொல்ல… ஓ… யே…
—BGM—
ஆண் : பூ போன்ற கன்னித் தேன்…
அவள் பேர் சொல்லி தித்தித்தேன்…
அது ஏன் என்று யோசித்தேன்…
அடடா நான் எங்கு சுவாசித்தேன்…
ஆண் : காத்தோடு மெளனங்கள்…
இசை வார்க்கின்ற நேரங்கள்…
பசி நீர் தூக்கம் இல்லாமல்…
உயிர் வாழ்கின்ற மாயங்கள்…
ஆண் : அலைகடலாய் இருந்த மனம்…
துளி துளியாய் சிதறியதே…
ஐம்புலனும் என் மனமும்…
எனக்கெதிராய் செயல்படுதே…
ஆண் : விழி காண முடியாத மாற்றம்…
அதை மூடி மறைக்கின்ற தோற்றம்…
ஒரு மெளன புயல் வீசுதே…
அதில் மனம் தட்டு தடுமாறும்… ஓ… யே…
—BGM—
ஆண் : கேட்காத ஓசைகள்…
இதழ் தாண்டாத வார்த்தைகள்…
இமை ஆடாத பார்வைகள்…
இவை நான் கொண்ட மாற்றங்கள்…
ஆண் : சொல் என்னும் ஓர் நெஞ்சம்…
எனை நில் என்னும் ஓர் நெஞ்சம்…
எதிர்பார்க்காமல் என் வாழ்வில்…
ஒரு போர்க்காலம் ஆரம்பம்…
ஆண் : இருதயமே துடிக்கிறதா…
துடிப்பது போல் நடிக்கிறதா…
உரைத்திடவா… மறைத்திடவா…
ரகசியமாய் தவித்திடவா…
ஆண் : ஒரு பெண்ணின் நினைவென்ன செய்யும்…
எனை கத்தி இல்லாமல் கொய்யும்…
இதில் மீள வழி உள்ளதே…
இருப்பினும் உள்ளம் விரும்பாது… ஓ… யே…
—BGM—
ஆண் : விழிகளின் அருகினில் வானம்…
வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்…
இது ஐந்து புலன்களின் ஏக்கம்…
என் முதல் முதல் அனுபவம்… ஓ… யே…
—BGM—
ஆண் : ஒலியின்றி உதடுகள் பேசும்…
பெறும் புயலென வெளிவரும் சுவாசம்…
ஒரு சுவடின்றி நடந்திடும் பாதம்…
இது அதிசய அனுபவம்… ஓ… யே…
—BGM—
ஆண் : பெண்ணை சந்தித்தேன்…
அவள் நட்பை யாசித்தேன்…
அவள் பண்பை நேசித்தேன்…
வேறென்ன நான் சொல்ல… ஓ… யே…
—BGM—
Notes : Vizhigalin Aruginil Song Lyrics in Tamil. This Song from Azhagiya Theeye (2004). Song Lyrics penned by Vairamuthu. விழிகளின் அருகினில் பாடல் வரிகள்.