பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
பழனி பாரதி | சாதனா சர்கம் | இளையராஜா | ரமணா |
Vaanaviley Song Lyrics in Tamil
—BGM—
பெண் : வானவில்லே வானவில்லே வந்ததென்ன இப்போது…
அள்ளிவந்த வண்ணங்களை எங்கள் நெஞ்சில் நீ தூவு…
பெண் : சின்ன பறவைகள் கொஞ்சி பறக்குதே…
பட்டு சிறகிலே பனி தெளிக்குதே…
அடி தாய் தென்றலே வந்து நீ பாடு ஆராரோ… ஓஓ…
பெண் : வானவில்லே வானவில்லே வந்ததென்ன இப்போது…
—BGM—
பெண் : எந்த நாட்டுக் குயிலின் கூட்டமும்…
பாடும் பாடல் கூ கூ…
எந்த நாட்டுக் கிளிகள் பேச்சிலும்…
கொஞ்சும் மழலை உண்டு…
பெண் : ஜாதி என்ன கேட்டுவிட்டு தென்றல் நம்மை தொடுமா…
தேசம் எது பாத்துவிட்டு மண்ணில் மழை வருமா…
உன்னோடு நானும் எல்லோரும் ஓர் சொந்தம்…
அன்புள்ள உள்ளத்திலே…
பெண் : வானவில்லே வானவில்லே வந்ததென்ன இப்போது…
அள்ளிவந்த வண்ணங்களை எங்கள் நெஞ்சில் நீ தூவு…
—BGM—
பெண் : மேக மூட்டம் கொஞ்சம் விலகவே…
வண்ண நிலவு கண்டேன்…
அன்பு பொழியும் கருணை வெள்ளத்தில்…
நெஞ்சம் மூழ்க நின்றேன்…
பெண் : உன்னை போலே சிலர் இருந்தால்…
மண்ணில் சொர்கம் வருமே…
இயற்கை அன்னை படைத்ததெல்லாம்…
பொதுவினில் வருமே…
மூங்கில் காடெல்லாம் சங்கீதம் பாடாதோ…
தென்றலின் சொர்கத்திலே…
பெண் : வானவில்லே வானவில்லே வந்ததென்ன இப்போது…
அள்ளிவந்து வண்ணங்களை எங்கள் நெஞ்சில் நீ தூவு…
பெண் : சின்னப் பறவைகள் கொஞ்சிப் பறக்குதே…
பட்டுச் சிறகிலே பனி தெளிக்குதே…
அடி தாய்த் தென்றலே வந்து நீ பாடு ஆராரோ… ஓஓ…
பெண் : வானவில்லே வானவில்லே வந்ததென்ன இப்போது…
ஹ்ம்ம் ம்ம்ம் லா லாலா லாலாலா…
Notes : Vaanaviley Song Lyrics in Tamil. This Song from Ramanaa (2002). Song Lyrics penned by Pazhani Bharathi. வானவில்லே வானவில்லே பாடல் வரிகள்.