வானவில்லே வானவில்லே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிசாதனா சர்கம்இளையராஜாரமணா

Vaanaviley Song Lyrics in Tamil


BGM

பெண் : வானவில்லே வானவில்லே வந்ததென்ன இப்போது…
அள்ளிவந்த வண்ணங்களை எங்கள் நெஞ்சில் நீ தூவு…

பெண் : சின்ன பறவைகள் கொஞ்சி பறக்குதே…
பட்டு சிறகிலே பனி தெளிக்குதே…
அடி தாய் தென்றலே வந்து நீ பாடு ஆராரோ… ஓஓ…

பெண் : வானவில்லே வானவில்லே வந்ததென்ன இப்போது…

BGM

பெண் : எந்த நாட்டுக் குயிலின் கூட்டமும்…
பாடும் பாடல் கூ கூ…
எந்த நாட்டுக் கிளிகள் பேச்சிலும்…
கொஞ்சும் மழலை உண்டு…

பெண் : ஜாதி என்ன கேட்டுவிட்டு தென்றல் நம்மை தொடுமா…
தேசம் எது பாத்துவிட்டு மண்ணில் மழை வருமா…
உன்னோடு நானும் எல்லோரும் ஓர் சொந்தம்…
அன்புள்ள உள்ளத்திலே…

பெண் : வானவில்லே வானவில்லே வந்ததென்ன இப்போது…
அள்ளிவந்த வண்ணங்களை எங்கள் நெஞ்சில் நீ தூவு…

BGM

பெண் : மேக மூட்டம் கொஞ்சம் விலகவே…
வண்ண நிலவு கண்டேன்…
அன்பு பொழியும் கருணை வெள்ளத்தில்…
நெஞ்சம் மூழ்க நின்றேன்…

பெண் : உன்னை போலே சிலர் இருந்தால்…
மண்ணில் சொர்கம் வருமே…
இயற்கை அன்னை படைத்ததெல்லாம்…
பொதுவினில் வருமே…
மூங்கில் காடெல்லாம் சங்கீதம் பாடாதோ…
தென்றலின் சொர்கத்திலே…

பெண் : வானவில்லே வானவில்லே வந்ததென்ன இப்போது…
அள்ளிவந்து வண்ணங்களை எங்கள் நெஞ்சில் நீ தூவு…

பெண் : சின்னப் பறவைகள் கொஞ்சிப் பறக்குதே…
பட்டுச் சிறகிலே பனி தெளிக்குதே…
அடி தாய்த் தென்றலே வந்து நீ பாடு ஆராரோ… ஓஓ…

பெண் : வானவில்லே வானவில்லே வந்ததென்ன இப்போது…
ஹ்ம்ம் ம்ம்ம் லா லாலா லாலாலா…


Notes : Vaanaviley Song Lyrics in Tamil. This Song from Ramanaa (2002). Song Lyrics penned by Pazhani Bharathi. வானவில்லே வானவில்லே பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top