பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | எஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ரா | பால பாரதி | தலைவாசல் |
Unnai Thottu Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : உன்னைத் தொட்ட தென்றல் இன்று…
என்னைத் தொட்டுச் சொன்னதொரு சேதி…
உள்ளுக்குள்ளே ஆசை வைத்து…
தள்ளித் தள்ளிப் போவதென்ன நீதி…
பெண் : பேச வந்தேன் நூறு வார்த்தை…
பேசிப் போனேன் வேறு வார்த்தை…
உண்மை சொல்லவா…
ஆண் : உன்னைத் தொட்ட தென்றல் இன்று…
என்னைத் தொட்டுச் சொன்னதொரு சேதி…
உள்ளுக்குள்ளே ஆசை வைத்து…
தள்ளித் தள்ளிப் போவதென்ன நீதி…
—BGM—
ஆண் : தலைவி உந்தன் கண் பார்க்கும் பொழுதே…
தலைப்புச் செய்தி தந்தாயே…
தலைப்புச் செய்தி புரியாமல் தவித்தேன்…
தலைப்பைக் கையில் தந்தாயே…
பெண் : உறங்கும் போதும் உந்தன் பேரை…
சொல்லிப் பார்க்கிறேன்…
உன்னைக் கண்டு பேசும்போதும்…
உச்சி வேர்க்கிறேன்…
ஆண் : இந்தச் சுந்தர வார்த்தைகள் தந்தது யாரடி…
உன்னைக் கேட்கிறேன்…
பெண் : உன்னைத் தொட்ட தென்றல் இன்று…
என்னைத் தொட்டுச் சொன்னதொரு சேதி…
ஆண் : உள்ளுக்குள்ளே ஆசை வைத்து…
தள்ளித் தள்ளிப் போவதென்ன நீதி…
—BGM—
பெண் : உன்னை எண்ணி என் மேனி மெலிய…
உருகி உருகி நூலானேன்…
உன்னைக் கண்டு ஓர் வார்த்தை மொழிய…
உடைந்து உடைந்து தூளானேன்…
ஆண் : பார்க்க வந்த சேதி மட்டும் சொன்ன முல்லையே…
பருவம் வந்த தேதி மட்டும் சொல்லவில்லையே…
பெண் : நீ பார்வையில் காதலன்…
பழக்கத்தில் கோவலன் சொல்லவில்லையே…
ஆண் : உன்னைத் தொட்ட தென்றல் இன்று…
என்னைத் தொட்டுச் சொன்னதொரு சேதி…
உள்ளுக்குள்ளே ஆசை வைத்து…
தள்ளித் தள்ளிப் போவதென்ன நீதி…
பெண் : பேச வந்தேன் நூறு வார்த்தை…
பேசிப் போனேன் வேறு வார்த்தை…
உண்மை சொல்லவா…
ஆண் : உன்னைத் தொட்ட தென்றல் இன்று…
என்னைத் தொட்டுச் சொன்னதொரு…
உள்ளுக்குள்ளே ஆசை வைத்து…
தள்ளித் தள்ளிப் போவதென்ன…
Notes : Unnai Thottu Song Lyrics in Tamil. This Song from Thalai Vaasal (1992). Song Lyrics penned by Vairamuthu. உன்னைத் தொட்ட தென்றல் பாடல் வரிகள்.