உன்னைத் தொட்ட தென்றல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராபால பாரதிதலைவாசல்

Unnai Thottu Song Lyrics in Tamil


BGM

ஆண் : உன்னைத் தொட்ட தென்றல் இன்று…
என்னைத் தொட்டுச் சொன்னதொரு சேதி…
உள்ளுக்குள்ளே ஆசை வைத்து…
தள்ளித் தள்ளிப் போவதென்ன நீதி…

பெண் : பேச வந்தேன் நூறு வார்த்தை…
பேசிப் போனேன் வேறு வார்த்தை…
உண்மை சொல்லவா…

ஆண் : உன்னைத் தொட்ட தென்றல் இன்று…
என்னைத் தொட்டுச் சொன்னதொரு சேதி…
உள்ளுக்குள்ளே ஆசை வைத்து…
தள்ளித் தள்ளிப் போவதென்ன நீதி…

BGM

ஆண் : தலைவி உந்தன் கண் பார்க்கும் பொழுதே…
தலைப்புச் செய்தி தந்தாயே…
தலைப்புச் செய்தி புரியாமல் தவித்தேன்…
தலைப்பைக் கையில் தந்தாயே…

பெண் : உறங்கும் போதும் உந்தன் பேரை…
சொல்லிப் பார்க்கிறேன்…
உன்னைக் கண்டு பேசும்போதும்…
உச்சி வேர்க்கிறேன்…

ஆண் : இந்தச் சுந்தர வார்த்தைகள் தந்தது யாரடி…
உன்னைக் கேட்கிறேன்…

பெண் : உன்னைத் தொட்ட தென்றல் இன்று…
என்னைத் தொட்டுச் சொன்னதொரு சேதி…

ஆண் : உள்ளுக்குள்ளே ஆசை வைத்து…
தள்ளித் தள்ளிப் போவதென்ன நீதி…

BGM

பெண் : உன்னை எண்ணி என் மேனி மெலிய…
உருகி உருகி நூலானேன்…
உன்னைக் கண்டு ஓர் வார்த்தை மொழிய…
உடைந்து உடைந்து தூளானேன்…

ஆண் : பார்க்க வந்த சேதி மட்டும் சொன்ன முல்லையே…
பருவம் வந்த தேதி மட்டும் சொல்லவில்லையே…

பெண் : நீ பார்வையில் காதலன்…
பழக்கத்தில் கோவலன் சொல்லவில்லையே…

ஆண் : உன்னைத் தொட்ட தென்றல் இன்று…
என்னைத் தொட்டுச் சொன்னதொரு சேதி…
உள்ளுக்குள்ளே ஆசை வைத்து…
தள்ளித் தள்ளிப் போவதென்ன நீதி…

பெண் : பேச வந்தேன் நூறு வார்த்தை…
பேசிப் போனேன் வேறு வார்த்தை…
உண்மை சொல்லவா…

ஆண் : உன்னைத் தொட்ட தென்றல் இன்று…
என்னைத் தொட்டுச் சொன்னதொரு…
உள்ளுக்குள்ளே ஆசை வைத்து…
தள்ளித் தள்ளிப் போவதென்ன…


Notes : Unnai Thottu Song Lyrics in Tamil. This Song from Thalai Vaasal (1992). Song Lyrics penned by Vairamuthu. உன்னைத் தொட்ட தென்றல் பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top