பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | இளையராஜா & கே.எஸ். சித்ரா | இளையராஜா | கீதாஞ்சலி |
Thulli Ezhunthathu Song Lyrics in Tamil
—BGM—
பெண் : துள்ளி எழுந்தது பாட்டு…
சின்ன குயிலிசை கேட்டு…
சந்த வரிகள போட்டு…
சொல்லிக் கொடுத்தது காற்று…
பெண் : உறவோடுதான் அதப் பாடணும்…
இரவோடுதான் அரங்கேறணும்…
பெண் : துள்ளி எழுந்தது பாட்டு…
சின்ன குயிலிசை கேட்டு…
ஆண் : துள்ளி எழுந்தது பாட்டு…
சின்ன குயிலிசை கேட்டு…
சந்த வரிகள போட்டு…
சொல்லிக் கொடுத்தது காற்று…
ஆண் : உறவோடுதான் அதப் பாடணும்…
இரவோடுதான் அரங்கேறணும்…
ஆண் : துள்ளி எழுந்தது பாட்டு…
சின்ன குயிலிசை கேட்டு…
—BGM—
ஆண் : உயிரே ஒரு வானம்பாடி…
உனக்காக கூவுது…
அழகே புது ஆசை வெள்ளம்…
அணை தாண்டி தாவுது…
ஆண் : மலரே தினம் மாலை நேரம்…
மனம்தானே நோகுது…
ஆண் : மாலை முதல்…
மாலை முதல் காலை வரை…
சொன்னால் என்ன காதல் கதை…
காமன் கணை எனை வதைக்குதே…
ஆண் : துள்ளி எழுந்தது பாட்டு…
சின்ன குயிலிசை கேட்டு…
—BGM—
ஆண் : அடியே ஒரு தூக்கம் போட்டு…
நெடுநாள்தான் ஆனது…
கிளியே பசும்பாலும் தேனும்…
வெறுப்பாகி போனது…
ஆண் : நிலவே பகல் நேரம் போலே…
நெருப்பாக காயுது…
ஆண் : நான் தேடிடும்…ஹ்ம்ம்…
நான் தேடிடும் ராசாத்தியே…
நீ போவதா ஏமாத்தியே…
வா வா கண்ணே இதோ அழைக்குது…
ஆண் : துள்ளி எழுந்தது பாட்டு…
சின்ன குயிலிசை கேட்டு…
சந்த வரிகள போட்டு…
சொல்லிக் கொடுத்தது காற்று…
ஆண் : உறவோடுதான் அதப் பாடணும்…
இரவோடுதான் அரங்கேறணும்…
ஆண் : துள்ளி எழுந்தது பாட்டு…
சின்ன குயிலிசை கேட்டு…
Notes : Thulli Ezhunthathu Song Lyrics in Tamil. This Song from Geethanjali (1985). Song Lyrics penned by Vairamuthu. துள்ளி எழுந்தது பாடல் வரிகள்.