Tag Archives: ஸ்மிதா

aambal-poovai-saambal-seithaai-song-lyrics

ஆம்பல் பூவை சாம்பல் செய்தாய்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர் ஆல்பம்
வைரமுத்துஸ்மிதாயஷ்வந்த் நாக்நாட்படு தேறல்

Aambal Poovai Saambal Seithaai Song Lyrics in Tamil


பெண் : ஆம்பல் பூவைச் சாம்பல் செய்தாய்…

—BGM—

பெண் : ஆம்பல் பூவைச் சாம்பல் செய்தாய்…
அய்யோ என்மேல் அய்யம் கொண்டாய்…

—BGM—

பெண் : ஆம்பல் பூவைச் சாம்பல் செய்தாய்…
அய்யோ என்மேல் அய்யம் கொண்டாய்…

பெண் : அய்யோ என்மேல் அய்யம் கொண்டாய்…

பெண் : எரியும் தீயை உறையும் என்றாய்…
ஏனோ என்மேல் களங்கம் கண்டாய்…

பெண் : ஏனோ என்மேல் களங்கம் கண்டாய்…

பெண் : கற்பு கடவுள் ரெண்டும் ஒன்று…
காட்சி சாட்சி உண்டா சொல்லு…

பெண் : உண்டா சொல்லு…

—BGM—

பெண் : ஆண்கள் செய்த ஆதிக்கம்…
பெண்கள் வாழ்வை சோதிக்கும்…
ராமன் செய்த தீக்குழி…
பெண்ணை இன்னும் பாதிக்கும்…

குழு (பெண்கள்) : பெண்ணை இன்னும் பாதிக்கும்…

பெண் : ஆற்றின் வெள்ளம் ஆண்கள் உள்ளம்…
அலையும் நீர்போல் சலனம் கொள்ளும்…
அலையும் நீரும் அலையும் போதும்…
ஆற்றின் கரைபோல் பெண்கள் உள்ளம்…

குழு (பெண்கள்) : ஆற்றின் கரைபோல் பெண்கள் உள்ளம்…

—BGM—

பெண் : தேகம் என்ற கோயிலில்…
காதல் என்ற தீபத்தை…
மானம் என்ற கைகளால்…
நாளும் நாளும் காக்கிறேன்…

பெண் : கற்பு என்றும் உடலில் இல்லை…
கடவுள் ஒன்றும் கல்லில் இல்லை…
கற்பு என்றும் உடலில் இல்லை…
கடவுள் ஒன்றும் கல்லில் இல்லை…

பெண் : அசையா மனமே கற்பின் திண்மை…
அடியாள் அசையாள் அதுவே உண்மை…
அதுவே உண்மை…
அதுவே உண்மை…
அதுவே உண்மை…

—BGM—

பெண் : ஆம்பல் பூவைச் சாம்பல் செய்தாய்…
அய்யோ என்மேல் அய்யம் கொண்டாய்…

—BGM—

பெண் : ஆம்பல் பூவைச் சாம்பல் செய்தாய்…
அய்யோ என்மேல் அய்யம் கொண்டாய்…

—BGM—


Notes : Aambal Poovai Saambal Seithaai Song Lyrics in Tamil. This Song from Album (2021). Song Lyrics penned by Vairamuthu. ஆம்பல் பூவைச் சாம்பல் செய்தாய் பாடல் வரிகள்.