Tag Archives: சி.சத்யா

ratatapata-song-lyrics-aranmanai3

ரடடபடா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுஅறிவு & ரானினா ரெட்டிசி.சத்யாஅரண்மனை 3

Ratatapata Song Lyrics in Tamil


BGM

ஆண் : ரடடபடா…
லைட்ஸ் ஒன் மேன்…
ரடடபடா…
லைட்ஸ் ஒன் பேபி…
ரடடபடா ரடடபடா…
ரா ரா ரெடி கோ…

ஆண் : அரண்மனைக்குள்ள யாருடா…
அது அரண்டவன் கண்ணுக்குதான் பேயிடா…
கதவடைப்பது யாருடா…
உன்ன பயப்பட வைக்கும் வந்து பாருடா…

ஆண் : பல்ல காட்டும் உன்ன கேக்கும்…
வந்து கண்ண கண்ண உருட்டிக்கும்…
அது கேப்புல தாக்கும் கொல்ல பாக்கும்…
அது நினைச்சத நடத்திட எடம் கேக்கும்…

ஆண் : ரடடபடா ஹேய் ரடடபடா…
ரடடபடா ஹேய் ரடடபடா…
ரா ரா ரா ரெடி பார்…

BGM

ஆண் : ரடடபடா உன்ன கடிக்கும்…
ரடடபடா உன்ன இழுக்கும்…
ரடடபடா கண்ண பறிக்கும்…
ரடடபடா…

BGM

ஆண் : நடக்குற இது ஒரு படபட நொடி…
பயத்துல ஒலருது அரண்மனை கிளி…
இன்னும் கொஞ்ச நேரத்துல இருக்குது இடி…
அடிக்கடி எழும்புது சலசல ஒலி…

ஆண் : சின்னஞ்சிறு வயசுல சொல்லித்தர பயம்…
கல்லறைக்கு போகும் போது கூட கூட வரும்…
மனசுல நெனைப்பது நெனப்பில்ல நிஜம்…
நிஜத்துக்கு பயந்தா உனக்கில்ல எடம்…

ஆண் : இங்க வந்து சிரிக்குது…
உடம்பெல்லாம் நடுங்குது…
கைய கட்டி இழுக்குது…
அரண்மனை அழைக்குது…
அந்தபக்கம் சிரிக்குது…
இந்த பக்கம் மொறைக்குது…
கதவு இங்கு திறக்குது…
அரண்மனை…

BGM

ஆண் : அரண்மனை… அரண்மனை…
அரண்மனை… அரண்மனை…
அரண்மனை… அரண்மனை…
அரண்மனை… அரண்மனை…

ஆண் : அரண்மனைக்குள்ள யாருடா…
அது அரண்டவன் கண்ணுக்குதான் பேயிடா…
கதவடைப்பது யாருடா…
உன்ன பயப்பட வைக்கும் வந்து பாருடா…

ஆண் : சேக் சேக் காரா சேக் இட் சேக் இட்…
அது பொல்லாங்காட்டி ப்ரேக் இட் ப்ரேக் இட்…
ஆட்டம் போடுவ ராக் இட் ராக் இட்…
இந்த அரண்மனை கதவுல பி வேர் அ பார்…

ஆண் : அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம் ஒளிஞ்சு தாக்கும் நெஜம்…
நெஞ்சுக்குள்ள பட பட பயத்த காட்டும்… ஓஹொ…
முன்ன பின்ன தெரியாது முடிஞ்சு போச்சு கதை…
நல்ல கதைலாம் இங்க பொரட்டி போட்டு வரும்…

ஆண் : கண்ணாடி முன்னாடி கைகாட்டுது…
இல்லாத பொல்லாத பேய் காட்டுது…
சொல்லாம கொல்லாம வாலாட்டுது…
உன்னோட என்னோட நிறம் தாக்குது…

ஆண் : உள்ளுக்குள்ள எரியுது…
முன்ன பின்ன இழுக்குது…
கொல்ல கொல்ல துடிக்குது…
பல்ல பல்ல இழிக்குது…
அள்ளிவிட்டு தொலைக்குது…
உள்ள இங்க இனிக்குது…
அரண்மனை அழைக்குது…

ஆண் : ரடடபடா…
லைட்ஸ் ஒன் மேன்…
ரடடபடா…
லைட்ஸ் ஒன் பேபி…


Notes : Ratatapata Song Lyrics in Tamil. This Song from Aranmanai 3 (2021). Song Lyrics penned by Arivu. ரடடபடா பாடல் வரிகள்.


செங்காந்தலே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ரீமாசி.சத்யாஅரண்மனை 3

Sengaandhale Song Lyrics in Tamil


பெண் : செங்காந்தலே உனை அள்ளவா…
செல்ல தென்றலே உனை ஏந்தவா…
அழைத்தேன் உன்னை என்னோடு…
இருப்பேன் என்றும் உன்னோடு…
அன்பே உன் கைகள் என்னை தீண்டுமா…

பெண் : மிதந்தேன் காற்றில் காற்றாக…
நடந்தேன் இரவில் நிழலாக…
கண்ணே உன் கண்கள் என்னை காணுமா…

பெண் : ஆராரோ… ஆராரிரோ…
ஆராரோ… ஆராரிரோ…

BGM

பெண் : சின்ன சின்ன மலர் குவியலை போல்…
எனக்குள் மலர்ந்தாய்…
என்ன என்ன உயிர் சிலிர்க்க வைத்து…
கருவில் அசைந்தாய்…

பெண் : உன்னைப் பெறும் அன்னை வலி…
வலியல்ல ஓர் வரமே…
என் மார்பிலே கூடுகட்டி…
நீ உறங்கிடும் நாள் வருமே…

பெண் : பால் கசியும் இதழோடு…
உன்னைக் காணவே…
தெய்வம் கூட ஓசை இன்றி…
வந்து போகுமே…

பெண் : செங்காந்தலே உனை அள்ளவா…
செல்ல தென்றலே உனை ஏந்தவா…

BGM

பெண் : அன்னை நெஞ்சில் அனல் எரிகையிலே…
மழைபோல் வந்தாய்…
எந்த திசையிலும் இருட்டுக்குள் நான்…
வெளிச்சம் தந்தாய்…

பெண் : ஜென்மம் ஒன்று போதாதென்று…
ஏழு ஜென்மம் நான் சுமப்பேன்…
என் வாழ்விலே ஒரே இன்பம்…
கண்ணில் வைத்து பார்த்து கொள்வேன்…

பெண் : உன் மேல் தூசும் தீண்டாமல்…
காப்பேன் அன்பே…
காலம் முழுதும் உனக்காக…
வாழ்வேன் அன்பே…

பெண் : செங்காந்தலே… ஆராரிரோ…
சின்ன தென்றலே… ஆராரிரோ…

BGM


Notes : Sengaandhale Song Lyrics in Tamil. This Song from Aranmanai 3 (2021). Song Lyrics penned by Pa. Vijay. செங்காந்தலே பாடல் வரிகள்.