சோலைப் பூவில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முத்துலிங்கம்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாவெள்ளை ரோஜா

Solai Poovil Malai Thendral Song Lyrics in Tamil


BGM

ஆண் : சோலைப் பூவில் மாலைத் தென்றல்…
பாடும் நேரம்…
ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும்…
ஆடும் காலம்…

பெண் : புது நாணம் கொள்ளாமல்…
ஒரு வார்த்தை இல்லாமல்…
மலர் கண்கள் நாலும் மூடிக் கொள்ளும்…
காதல் யோகம்…

பெண் : சோலைப் பூவில் மாலைத் தென்றல்…
பாடும் நேரம்…
ஆண் : ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும்…
ஆடும் காலம்…

BGM

பெண் : சந்தனக் காடு நானுன் செந்தமிழ் ஏடு…
ஆண் : மான் விழி மாது நீயோ மன்மதன் தூது…

பெண் : மேகத்துக்குள் மின்னல் போலே நின்றாயே…
மின்னல் தேடும் தாழம்பூவாய் நானும் வந்தேனே…

ஆண் : தாகம் தீர்க்கும் தண்ணீர் போலே…
நீயும் வந்தாயே…
தாவிப் பாயும் மீனைப் போலே…
நானும் ஆனேனே…

பெண் : விண்ணில் இல்லா சொர்க்கம் தன்னை…
உன்னில் இங்கே கண்டேனே…

ஆண் : கள்ளில் இல்லா இன்பம் உந்தன்…
சொல்லில் இங்கே கண்டேனே…

BGM

ஆண் : சோலைப் பூவில் மாலைத் தென்றல்…
பாடும் நேரம்…
பெண் : ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும்…
ஆடும் காலம்…

BGM

ஆண் : சென்னில மேடில் தண்ணீர் சேர்ந்தது போலே…
பெண் : ஆனது நெஞ்சம் நீயென் வாழ்க்கையின் சொந்தம்…

ஆண் : என்றும் என்றும் எந்தன் உள்ளம் உன்னோடு…
எந்தன் நெஞ்சில் பொங்கும் அன்பில் நாளும் நீராடு…

பெண் : கங்கை வெள்ளம் வற்றும்போதும்…
காதல் வற்றாது…
திங்கள் வானில் தேயும்போதும்…
சிந்தை தேயாது…

ஆண் : மண்ணில் தோன்றும் ஜென்மம் யாவும்…
உன்மேல் அன்பு மாறாது…

பெண் : உன்னை அன்றித் தென்றல் கூட…
எந்தன் தேகம் தீண்டாது…

BGM

பெண் : சோலைப் பூவில் மாலைத் தென்றல்…
பாடும் நேரம்…
ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும்…
ஆடும் காலம்…

ஆண் : புது நாணம் கொள்ளாமல்…
ஒரு வார்த்தை இல்லாமல்…
மலர் கண்கள் நாலும் மூடிக் கொள்ளும்…
காதல் யோகம்…

ஆண் & பெண் : சோலைப் பூவில் மாலைத் தென்றல்…
பாடும் நேரம்…
ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும்…
ஆடும் காலம்…

BGM


Notes : Solai Poovil Malai Thendral Song Lyrics in Tamil. This Song from Vellai Roja (1983). Song Lyrics penned by Muthulingam. சோலைப் பூவில் பாடல் வரிகள்.


Scroll to Top