பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
முத்துலிங்கம் | எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகி | இளையராஜா | வெள்ளை ரோஜா |
Solai Poovil Malai Thendral Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : சோலைப் பூவில் மாலைத் தென்றல்…
பாடும் நேரம்…
ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும்…
ஆடும் காலம்…
பெண் : புது நாணம் கொள்ளாமல்…
ஒரு வார்த்தை இல்லாமல்…
மலர் கண்கள் நாலும் மூடிக் கொள்ளும்…
காதல் யோகம்…
பெண் : சோலைப் பூவில் மாலைத் தென்றல்…
பாடும் நேரம்…
ஆண் : ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும்…
ஆடும் காலம்…
—BGM—
பெண் : சந்தனக் காடு நானுன் செந்தமிழ் ஏடு…
ஆண் : மான் விழி மாது நீயோ மன்மதன் தூது…
பெண் : மேகத்துக்குள் மின்னல் போலே நின்றாயே…
மின்னல் தேடும் தாழம்பூவாய் நானும் வந்தேனே…
ஆண் : தாகம் தீர்க்கும் தண்ணீர் போலே…
நீயும் வந்தாயே…
தாவிப் பாயும் மீனைப் போலே…
நானும் ஆனேனே…
பெண் : விண்ணில் இல்லா சொர்க்கம் தன்னை…
உன்னில் இங்கே கண்டேனே…
ஆண் : கள்ளில் இல்லா இன்பம் உந்தன்…
சொல்லில் இங்கே கண்டேனே…
—BGM—
ஆண் : சோலைப் பூவில் மாலைத் தென்றல்…
பாடும் நேரம்…
பெண் : ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும்…
ஆடும் காலம்…
—BGM—
ஆண் : சென்னில மேடில் தண்ணீர் சேர்ந்தது போலே…
பெண் : ஆனது நெஞ்சம் நீயென் வாழ்க்கையின் சொந்தம்…
ஆண் : என்றும் என்றும் எந்தன் உள்ளம் உன்னோடு…
எந்தன் நெஞ்சில் பொங்கும் அன்பில் நாளும் நீராடு…
பெண் : கங்கை வெள்ளம் வற்றும்போதும்…
காதல் வற்றாது…
திங்கள் வானில் தேயும்போதும்…
சிந்தை தேயாது…
ஆண் : மண்ணில் தோன்றும் ஜென்மம் யாவும்…
உன்மேல் அன்பு மாறாது…
பெண் : உன்னை அன்றித் தென்றல் கூட…
எந்தன் தேகம் தீண்டாது…
—BGM—
பெண் : சோலைப் பூவில் மாலைத் தென்றல்…
பாடும் நேரம்…
ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும்…
ஆடும் காலம்…
ஆண் : புது நாணம் கொள்ளாமல்…
ஒரு வார்த்தை இல்லாமல்…
மலர் கண்கள் நாலும் மூடிக் கொள்ளும்…
காதல் யோகம்…
ஆண் & பெண் : சோலைப் பூவில் மாலைத் தென்றல்…
பாடும் நேரம்…
ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும்…
ஆடும் காலம்…
—BGM—
Notes : Solai Poovil Malai Thendral Song Lyrics in Tamil. This Song from Vellai Roja (1983). Song Lyrics penned by Muthulingam. சோலைப் பூவில் பாடல் வரிகள்.