| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| பஞ்சு அருணாச்சலம் | எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகி | இளையராஜா | புவனா ஒரு கேள்விக்குறி |
Raja Enbaar Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ராஜா என்பார் மந்திரி என்பார்…
ராஜ்ஜியம் இல்லை ஆள…
ஒரு ராணியும் இல்லை வாழ…
ஆண் : ஒரு உறவும் இல்லை…
அதில் பிரிவும் இல்லை…
அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுகிறேன் நாளும்…
அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுகிறேன் நாளும்…
ஆண் : ராஜா என்பார் மந்திரி என்பார்…
ராஜ்ஜியம் இல்லை ஆள…
ஒரு ராணியும் இல்லை வாழ…
—BGM—
ஆண் : கல்லுக்குள் ஈரமில்லை…
நெஞ்சுக்கும் இரக்கமில்லை…
ஆசைக்கு வெட்கம் இல்லை…
அனுபவிக்க யோகமில்லை…
ஆண் : கல்லுக்குள் ஈரமில்லை…
நெஞ்சுக்கும் இரக்கமில்லை…
ஆசைக்கு வெட்கம் இல்லை…
அனுபவிக்க யோகமில்லை…
ஆண் : பைத்தியம் தீர வைத்தியம் இல்லை…
உலகில் எனக்கு ஒரு வழி இல்லை…
ஆண் : ராஜா என்பார் மந்திரி என்பார்…
ராஜ்ஜியம் இல்லை ஆள…
ஒரு ராணியும் இல்லை வாழ…
—BGM—
ஆண் : நிலவுக்கு வானம் உண்டு…
மலருக்கு வாசம் உண்டு…
கொடிக்கென்று கிளையுமுண்டு…
எனக்கென்று என்ன உண்டு…
ஆண் : நிலவுக்கு வானம் உண்டு…
மலருக்கு வாசம் உண்டு…
கொடிக்கென்று கிளையுமுண்டு…
எனக்கென்று என்ன உண்டு…
ஆண் : ஏன் படைத்தானோ இறைவனும் என்னை…
மனதில் எனக்கு நிம்மதி இல்லை…
பெண் : ராஜா என்பேன் மந்திரி என்பேன்…
ராஜ்ஜியம் உனக்கு உண்டு…
ஒரு ராஜகுமாரன் உண்டு…
பெண் : நல்ல உறவு உண்டு…
அதில் பரிவு உண்டு…
அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுவதேன் நாளும்…
—BGM—
பெண் : தெய்வத்தில் உன்னைக் கண்டேன்…
தினம் தினம் பூஜை செய்தேன்…
நிலவுக்குக் கலங்கம் என்று…
உறவுக்கு விலகி நின்றேன்…
பெண் : தெய்வத்தில் உன்னைக் கண்டேன்…
தினம் தினம் பூஜை செய்தேன்…
நிலவுக்குக் கலங்கம் என்று…
உறவுக்கு விலகி நின்றேன்…
பெண் : மயக்கமும் ஏனோ கலக்கமும் ஏனோ…
உலகில் உனக்கு சரித்திரம் உண்டு…
பெண் : ராஜா என்பேன் மந்திரி என்பேன்…
ராஜ்ஜியம் உனக்கு உண்டு…
ஒரு ராஜகுமாரன் உண்டு…
பெண் : நல்ல உறவு உண்டு…
அதில் பரிவு உண்டு…
அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுவதேன் நாளும்…
அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுவதேன் நாளும்…
Notes : Raja Enbaar Song Lyrics in Tamil. This Song from Bhuvana Oru Kelvi Kuri (1977). Song Lyrics penned by Panchu Arunachalam. ராஜா என்பார் பாடல் வரிகள்.

