பூவே உன்னை நேசித்தேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஹம்சலேகாபருவராகம்

Poove Unnai Nesithen Song Lyrics in Tamil


BGM

ஆண் : பூவே உன்னை நேசித்தேன்…
பூக்கள் கொண்டு பூசித்தேன்…

BGM

ஆண் : கண்ணில் பாடம் வாசித்தேன்…
காதல் வேண்டும் யாசித்தேன்…

BGM

ஆண் : சொல்லத்தான் வார்த்தை இல்லை கண்ணே…

BGM

ஆண் : உள்ளத்தில் ஓசை இல்லை…
ஊமைக்கு பாஷை இல்லை…
கண்மணியே மெளனம் தானே தொல்லை… ஹா…

பெண் : நீயா என்னை நேசித்தாய்…
பூக்கள் கொண்டு பூசித்தாய்…

BGM

பெண் : உண்மை சொல்ல யோசித்தாய்…
கோழை போல யாசித்தாய்…

BGM

பெண் : ஏன் கண்ணா மீசை மேலே ஆசை…

BGM

பெண் : தேனென்றால் சாரம் வேண்டும்…
ஆணென்றால் வீரம் வேண்டும்…
ஆண்மையினால் பெண்மை வெல்ல வேண்டும்…

BGM

ஆண் : தேவி நீயும் இல்லாமல் ஆவி இங்கு வாழாது…
பெண் : ஓஹோ… ஆஹா… உண்மைதானா…

ஆண் : ஏழு ஜென்மம் போனாலும் இந்த பந்தம் போகாது…
பெண் : நீயா சொன்னாய் மெய்யேதானா…

ஆண் : உன்னையன்றி வேறு பெண்ணை உள்ளம் தேடாது…
பெண் : பேடி போல வாழ்ந்திருந்தால் பெண்மை சாயாது… ஆ…

BGM

ஆண் : பூவே உன்னை நேசித்தேன்…
பூக்கள் கொண்டு பூசித்தேன்…

பெண் : உண்மை சொல்ல யோசித்தாய்…
கோழை போல யாசித்தாய்…

BGM

பெண் : காதலுக்கு எப்போதும் வார்த்தை மட்டும் போதாது…
ஆண் : கண்ணே உந்தன் எண்ணம் என்ன…

பெண் : கண்ணடித்தால் தீராது…
காதல் இங்கு வாராது…
ஆண் : என்னைத் தந்தேன் இன்னும் என்ன…

பெண் : பெண்மையென்றால் வீரனுக்கே மாலை தந்துவிடும்…
வீரமுள்ள கைகளுக்கே சேலை தந்துவிடும்… ஹோ…

ஆண் : பூவே உன்னை நேசித்தேன்…
பூக்கள் கொண்டு பூசித்தேன்…
கண்ணில் பாடம் வாசித்தேன்…
காதல் வேண்டும் யாசித்தேன்…

பெண் : ஏன் கண்ணா மீசை மேலே ஆசை…
தேனென்றால் சாரம் வேண்டும்…
ஆணென்றால் வீரம் வேண்டும்…
ஆண்மையினால் பெண்மை வெல்ல வேண்டும்…


Notes : Poove Unnai Nesithen Song Lyrics in Tamil. This Song from Paruva Ragam (1987). Song Lyrics penned by Panchu Arunachalam. பூவே உன்னை நேசித்தேன் பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top