பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | கே.எஸ். சித்ரா | இளையராஜா | பூவே பூச்சூடவா |
Poove Poochooda Vaa Song Lyrics in Tamil
—BGM—
பெண் : பூவே பூச்சூடவா…
எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா…
பூவே பூச்சூடவா…
எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா…
வாசல் பார்த்து கண்கள் பூத்து…
காத்து நின்றேன் வா…
பெண் : பூவே பூச்சூடவா…
எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா…
—BGM—
பெண் : அழைப்பு மணி எந்த வீட்டில் கேட்டாலும்…
ஓடி நான் வந்து பார்ப்பேன்…
தென்றல் என் வாசல் தீண்டவே இல்லை…
கண்ணில் வெந்நீரை வார்ப்பேன்…
கண்களும் ஓய்ந்தது ஜீவனும் தேய்ந்தது…
பெண் : ஜீவ தீபங்கள் ஓயும் நேரம்…
நீயும் நெய்யாக வந்தாய்…
இந்த கண்ணீரில் சோகமில்லை…
இன்று ஆனந்தம் தந்தாய்…
பேத்தி என்றாலும் நீயும் என் தாய்…
பெண் : பூவே பூச்சூடவா…
எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா…
—BGM—
பெண் : காலம் கரைந்தாலும் கோலம் சிதைந்தாலும்…
பாசம் வெளுக்காது மானே…
நீரில் குளித்தாலும் நெருப்பில் எரித்தாலும்…
தங்கம் கருக்காது தாயே…
பொன்முகம் பார்க்கிறேன்…
அதில் என் முகம் பார்க்கிறேன்…
பெண் : இந்தப் பொன் மானை பார்த்துக் கொண்டே…
சென்று நான் சேர வேண்டும்…
மீண்டும் ஜென்மங்கள் மாறும் போதும்…
நீ என் மகளாக வேண்டும்…
பாச ராகங்கள் பாட வேண்டும்…
பெண் : பூவே பூச்சூடவா…
எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா…
எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா…
Notes : Poove Poochooda Vaa Song Lyrics in Tamil. This Song from Poove Poochooda Vaa (1985). Song Lyrics penned by Vairamuthu. பூவே பூச்சூடவா பாடல் வரிகள்.