பொன் மானே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஉன்னி மேனன் & உமா ரமணன்இளையராஜாஒரு கைதியின் டைரி

Ponn Maane Kovam Song Lyrics in Tamil


BGM

ஆண் : பொன் மானே கோபம் ஏனோ…
பொன் மானே கோபம் ஏனோ…
காதல் பால்குடம் கல்லாய் போனது…
ரோஜா ஏனடி முள்ளாய் போனது…

ஆண் : பொன் மானே கோபம் ஏனோ…
பொன் மானே கோபம் ஏனோ…

BGM

ஆண் : காவல் காப்பவன் கைதியாய் நிற்கிறேன் வா…
பெண் : ஊடல் என்பது காதலின் கெளரவம் போ…

ஆண் : ரெண்டு கண்களும் ஒன்று ஒன்றின் மேல்…
கோபம் கொள்வதா…
லா ல லாலல லா லா ல லாலல லா…
லா ல லாலல லா…

பெண் : ஆண்கள் எல்லாம் பொய்யின் வம்சம்…
ஆண் : கோபம் கூட அன்பின் அம்சம்…
பெண் : நாணம் வந்தால் ஊடல் போகும்… ஓஹோ…

ஆண் : பொன் மானே கோபம் ஏனோ…
பொன் மானே கோபம் ஏனோ…

BGM

பெண் : உந்தன் கண்களில் என்னையே பார்க்கிறேன் வா…
ஆண் : ரெண்டு பௌர்ணமி கண்களில் பார்க்கிறேன் வா…

பெண் : உன்னை பார்த்ததும் எந்தன் பெண்மைதான்…
கண் திறந்ததே…
லா ல லாலல லா லா ல லாலல லா…
லா ல லாலல லா…

ஆண் : கண்ணே மேலும் காதல் பேசு…
பெண் : நேரம் பார்த்து நீயும் பேசு…
ஆண் : பார்வை பூவை நெஞ்சில் வீசு… ஓஹோ…

{ ஆண் : பொன் மானே…
பெண் : ம்ம்ம்ம்…
ஆண் : கோபம்…
பெண் : ம்ம்ம்ம்…
ஆண் : எங்கே…
பெண் : ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்… } * (2)

பெண் : பூக்கள் மோதினால் காயம் நேருமா…
தென்றல் கிள்ளினால் ரோஜா தாங்குமா…

ஆண் & பெண் : லா ல லாலல லா லா ல லாலல லா…
லா ல லாலல லா…


Notes : Ponn Maane Kovam Song Lyrics in Tamil. This Song from Oru Kaidhiyin Diary (1985). Song Lyrics penned by Vairamuthu. பொன் மானே பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top