பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கபிலன் | திப்பு, அபய் ஜோத்புர்கர் & பார்கவி | ஹாரிஸ் ஜெயராஜ் | என்றென்றும் புன்னகை |
Othayilae Song Lyrics in Tamil
ஆண் : ஒத்தையில உலகம் மறந்து போச்சு…
உன்னப் பத்தி உசுரு முழுக்க பேச்சு…
ஆண் : நெஞ்சை துளைக்குதே…
உயிர் வலிக்குதே…
ஓஹோ ஹோ ஹோ ஹோ…
நம்மை நாமே நம்பி வாழ்ந்த…
நட்பு மீண்டும் வருமா…
குழு : ஒத்தையில உலகம் மறந்து போச்சு…
உன்னப் பத்தி உசுரு முழுக்க பேச்சு…
குழு : நெஞ்சை துளைக்குதே…
உயிர் வலிக்குதே…
நம்மை நாமே நம்பி வாழ்ந்த…
நட்பு மீண்டும் வருமா…
—BGM—
ஆண் : அரட்டைகள் அடித்தோமே…
குறட்டையில் சிரித்தோமே…
பறட்டையாய் திரிந்தோமே…
இப்போது பாதியில் பிரிந்தோமே…
ஆண் : இரவினில் நிழலாக…
இருவரை இழந்தேனே…
மழையினில் அழுதாலே…
கண்ணீரை யாரு அதை அறிவாரோ…
குழு : அவன் தொலைவினில் தொடர்கதையோ…
இவன் விழிகளில் விடுகதையோ…
இனிமேல் நானே தனியாள்
ஆனேன் நட்பு என்ன நடிப்போ…
—BGM—
ஆண் : நமக்கென இருந்தோமே…
தினசரி பிறந்தோமே…
திசைகளாய் பிரிந்தோமே…
கல்யாண காட்டினில் தொலைந்தோமே…
ஆண் : பனித்துளி மலரோடு…
பழக்கங்கள் சிலரோடு…
நட்புக்கு முடிவேது…
என்றே நீ சொன்னது மறக்காது…
குழு : நானும் மறக்கிறேன் முடியலயே…
கண்ணீர் வடிக்கிறேன் கரை இல்லையே…
இருந்தேன் உன்னால் இருப்பேன் உன்னால்…
நட்பு சேர்க்கும் ஒரு நாள்…
குழு : ஒத்தையில உலகம் மறந்து போச்சு…
உன்னப் பத்தி உசுரு முழுக்க பேச்சு…
ஆண் : நெஞ்சை துளைக்குதே…
உயிர் வலிக்குதே…
நம்மை நாமே நம்பி வாழ்ந்த…
நட்பு மீண்டும் வருமா…
Notes : Othayilae Song Lyrics in Tamil. This Song from Endrendrum Punnagai (2013). Song Lyrics penned by Kabilan. ஒத்தையில உலகம் பாடல் வரிகள்.