பாடலாசிரியர் | பாடகர் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
பழனி பாரதி | ஹரிஹரன் | தேவா | காலமெல்லாம் காதல் வாழ்க |
Oru Mani Adithal Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்…
டெலிபோன் குயிலே வேண்டும் உன் தரிசனம்…
போதும் கண்ணே நீ நடத்தும் நாடகமே…
தூங்கும் போதும் தூங்கவில்லை உன் ஞாபகமே…
பாடினால் அந்தப் பாடலின் ஸ்வரம் நீயடியோ…
தேடினால் விழி ஈரமாவது ஏனடியோ…
ஆண் : ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்…
டெலிபோன் குயிலே வேண்டும் உன் தரிசனம்…
—BGM—
ஆண் : வாசம் மட்டும் வீசும் பூவே வண்ணம் கொஞ்சம் காட்டுவாயா…
தென்றல் போலே எங்கும் உன்னை தேடுகிறேன் நான் தேடுகிறேன்…
—BGM—
ஆண் : தேடி உன்னைப் பார்த்துப் பார்த்து…
கண்கள் ரெண்டும் வேர்த்து வேர்த்து…
சிந்தும் விழி நீரில் நானே மூழ்குகிறேன்…
நான் மூழ்குகிறேன்…
ஆண் : வீசிடும் புயல் காற்றிலே நான் ஒற்றைச் சிறகானேன்…
காதலின் சுடும் தீயிலே நான் எறியும் விறகானேன்…
ஆண் : மேடைத்தோறும் பாடல் தந்த வான்மதியே…
ஜீவன் போகும் முன்பு வந்தால் நிம்மதியே…
போதும் கண்ணே நீ நடத்தும் நாடகமே…
தூங்கும்போதும் தூங்கவில்லை உன் ஞாபகமே…
ஆண் : ஓ… ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்…
டெலிபோன் குயிலே வேண்டும் உன் தரிசனம்…
—BGM—
ஆண் : உந்தன் முகம் பார்த்த பின்னே…
கண் இழந்து போவதென்றால்…
கண் இரண்டும் நான் இழப்பேன் இப்போதே…
நான் இப்போதே…
—BGM—
ஆண் : உந்தன் முகம் பார்க்கும் முன்னே…
நான் மறைந்து போவதென்றால்…
கண்கள் மட்டும் அப்பொழுதும் மூடாதே…
இமை மூடாதே…
—BGM—
ஆண் : காதலே என் காதலே என்னை காணிக்கை தந்துவிட்டேன்…
சோதனை இனி தேவையா சுடும் மூச்சினில் வெந்துவிட்டேன்…
ஆண் : காதல் என்னும் சாபம் தந்த தேவதையே…
காணலாமோ ராகம் இன்று போவது ஏன்…
போதும் கண்ணே நீ நடத்தும் நாடகமே…
தூங்கும் போதும் தூங்கவில்லை உன் ஞாபகமே…
ஆண் : ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்…
டெலிபோன் குயிலே வேண்டும் உன் தரிசனம்…
Notes : Oru Mani Adithal Song Lyrics in Tamil. This Song from Kaalemellam Kadhal Vaazhga (1997). Song Lyrics penned by Palani Bharathi. ஒரு மணி அடித்தால் பாடல் வரிகள்.