பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | கே.ஜே. யேசுதாஸ் & உமா ரமணன் | இளையராஜா | புதிய ஸ்வரங்கள் |
Oh Vanamulla Song Lyrics in Tamil
ஆண் : ஓ… வானம் உள்ள காலம் மட்டும்…
வாழும் இந்தக் காதல்…
இதுதான் தேவன் ஏற்பாடு…
—BGM—
ஆண் : ஓஓ… வானம் உள்ள காலம் மட்டும்…
வாழும் இந்தக் காதல்…
இதுதான் தேவன் ஏற்பாடு…
இணைத்தான் பூவை காற்றோடு…
பெண் : ஓஓ… கானம் உள்ள காலம் மட்டும்…
வாழும் இந்தப் பாடல்…
இனி என் ஜீவன் உன்னோடு…
வருவேன் நாளும் பின்னோடு…
ஆண் : நாள் முழுதும் நான் எழுதும்…
காதல் கதை புனிதம்…
பெண் : பூமுடிக்கும் நாள் வரைக்கும்…
காத்திருப்பேன் விரதம்…
ஆண் : ஓ… வானம் உள்ள காலம் மட்டும்…
வாழும் இந்தக் காதல்…
இதுதான் தேவன் ஏற்பாடு…
இணைத்தான் பூவை காற்றோடு…
—BGM—
ஆண் : சூர்யோதயம் சந்திரோதயம்…
காலை மாலை நீயாக…
பெண் : பெண்ணோவியம் பொன்னோவியம்…
சூடும் பூவும் நீயாக…
ஆண் : மாலை போலவே மாது…
மார்பில் ஆடிடும் போது…
பெண் : வேதங்கள் ஓத…
வெட்கங்கள் மோத…
கையும் கையும் கலந்துக் கொள்ளலாம்…
ஆண் : ஓ… வானம் உள்ள காலம் மட்டும்…
வாழும் இந்தக் காதல்…
இதுதான் தேவன் ஏற்பாடு…
இணைத்தான் பூவை காற்றோடு…
—BGM—
பெண் : பன்னீரையும் வெந்நீரென…
தீண்டும் போது நான் கண்டேன்…
ஆண் : பூமஞ்சமும் முள் மஞ்சமாய்…
தூங்கும் போது நான் கண்டேன்…
பெண் : காற்றில் காய்ந்திட மெல்ல…
காதல் பனித் துளி அல்ல…
ஆண் : தேகங்கள் இரண்டு…
ஜீவன்தான் ஒன்று…
ஒன்றை ஒன்று விலகக் கூடுமா…
பெண் : ஓ… கானம் உள்ள காலம் மட்டும்…
வாழும் இந்தப் பாடல்…
இனி என் ஜீவன் உன்னோடு…
வருவேன் நாளும் பின்னோடு…
ஆண் : ஓஓ… வானம் உள்ள காலம் மட்டும்…
வாழும் இந்தக் காதல்…
இதுதான் தேவன் ஏற்பாடு…
இணைத்தான் பூவை காற்றோடு…
பெண் : பூமுடிக்கும் நாள் வரைக்கும்…
காத்திருப்பேன் விரதம்…
ஆண் : நாள் முழுதும் நான் எழுதும்…
காதல் கதை புனிதம்…
ஆண் : ஓஓ… வானம் உள்ள காலம் மட்டும்…
வாழும் இந்தக் காதல்…
இதுதான் தேவன் ஏற்பாடு…
இணைத்தான் பூவை காற்றோடு…
Notes : Oh Vanamulla Song Lyrics in Tamil. This Song from Puthiya Swarangal (1992). Song Lyrics penned by Vaali. ஓ வானம் உள்ள காலம் பாடல் வரிகள்.