பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
காளிதாசன் | எஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ரா | சௌந்தர்யன் | முதல் சீதனம் |
Oh Nenjame Uyire Thanjame Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஓ நெஞ்சமே உயிரே தஞ்சமே…
உன் பார்வைதான் படனும் கொஞ்சமே…
நெருங்கி வந்து பேசி பழக ஆசை ஆசைதான்…
இதயத்துடிப்பில் உன் பெயரின் ஓசை ஓசைதான்…
ஆண் : ஓ நெஞ்சமே உயிரே தஞ்சமே…
உன் பார்வைதான் படனும் கொஞ்சமே…
—BGM—
ஆண் : உயிரிலே உன் பெயரை எழுதினேன்…
அருகிலே இல்லையென்று உருகினேன்…
மலையிலே செம்பருத்தி மலையிலே…
அலைகிறேன் இன்று ஓரு முடிவிலே…
ஆண் : என் அன்பே என்னென்பேன்…
என் ஆசை வீண் என்பேன்…
ஆண் : காதல் மனதின் பாரமே…
சேரும் கடிதம் கூறுமே…
நாளை விடியும் நேரமே
நதியில் என் உடல் மிதக்குமே…
—BGM—
பெண் : ஓ நெஞ்சமே உயிரே தஞ்சமே…
உன் பார்வைதான் படனும் கொஞ்சமே…
—BGM—
பெண் : மனதினை தந்துவிட துடிக்கிறேன்…
விழிகளில் துன்ப மழை வடிக்கிறேன்…
விதியினை வென்றுவிட நினைக்கிறேன்…
நதியிலே உன்னுடனே குதிக்கிறேன்…
பெண் : என் அன்பே என் நெஞ்சே…
நீ எங்கே நான் அங்கே…
காதல் கணவாய் போவதா…
கானல் நீராய் ஆவதா…
பெண் : வா வா உயிரே வா…
வாசல் திறந்தேன் வாழ வா…
பெண் : ஓ நெஞ்சமே உயிரே தஞ்சமே…
உன் பார்வைதான் படனும் கொஞ்சமே…
நெருங்கி வந்து பேசி பழக ஆசை ஆசைதான்…
இதயத்துடிப்பில் உன் பெயரின் ஓசை ஓசைதான்…
நெருங்கி வந்து பேசி பழக ஆசை ஆசைதான்…
இதயத்துடிப்பில் உன் பெயரின் ஓசை ஓசைதான்…
Notes : Oh Nenjame Uyire Thanjame Song Lyrics in Tamil. This Song from Mudhal Seedhanam (1992). Song Lyrics penned by Kalidasan. ஓ நெஞ்சமே பாடல் வரிகள்.