பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கண்ணதாசன் | பி.பி. ஸ்ரீனிவாஸ் | எம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்தி | நெஞ்சில் ஒரு ஆலயம் |
Ninaipathellam Nadanthuvittal Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்…
தெய்வம் ஏதுமில்லை…
நடந்ததையே நினைத்திருந்தால்…
அமைதி என்றுமில்லை…
ஆண் : நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்…
தெய்வம் ஏதுமில்லை…
நடந்ததையே நினைத்திருந்தால்…
அமைதி என்றுமில்லை…
ஆண் : முடிந்த கதை தொடர்வதில்லை…
இறைவன் ஏட்டினிலே…
தொடர்ந்த கதை முடிவதில்லை…
மனிதன் வீட்டினிலே…
ஆண் : நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்…
தெய்வம் ஏதுமில்லை…
நடந்ததையே நினைத்திருந்தால்…
அமைதி என்றுமில்லை…
—BGM—
ஆண் : ஆயிரம் வாசல் இதயம்…
அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்…
யாரோ வருவார் யாரோ இருப்பார்…
வருவதும் போவதும் தெரியாது…
ஆண் : ஒருவர் மட்டும் குடியிருந்தால்…
துன்பம் ஏதுமில்லை…
ஒன்றிருக்க ஒன்று வந்தால்…
என்றும் அமைதியில்லை…
ஆண் : நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்…
தெய்வம் ஏதுமில்லை…
நடந்ததையே நினைத்திருந்தால்…
அமைதி என்றுமில்லை…
—BGM—
ஆண் : எங்கே வாழ்க்கை தொடங்கும்…
அது எங்கே எவ்விதம் முடியும்…
இதுதான் பாதை இது தான் பயணம்…
என்பது யாருக்கும் தெரியாது…
ஆண் : பாதை எல்லாம் மாறி வரும்…
பயணம் முடிந்துவிடும்…
மாறுவதை புரிந்துகொண்டால்…
மயக்கம் தெளிந்துவிடும்…
ஆண் : நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்…
தெய்வம் ஏதுமில்லை…
நடந்ததையே நினைத்திருந்தால்…
அமைதி என்றுமில்லை…
Notes : Ninaipathellam Nadanthuvittal Song Lyrics in Tamil. This Song from Nenjil Ore Alayam (1962). Song Lyrics penned by Kannadasan. நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் பாடல் வரிகள்.