பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
ஆர். சுந்தர்ராஜன் | எஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ரா | தேவா | காலமெல்லாம் காத்திருப்பேன் |
Nilladi Endradhu Song Lyrics in Tamil
பெண் : நில்லடி என்றது உள்மனது…
செல்லடி என்றது பெண்மனது…
—BGM—
பெண் : ஒளி தரும் நிலவுக்கு இரவெதற்கு…
இரவிலே அல்லியை அணைப்பதற்கு…
நான் உன்னை அணைப்பேனே இரவெதற்கு…
பெண் : நில்லடி என்றது உள்மனது…
செல்லடி என்றது பெண்மனது…
ஒளி தரும் நிலவுக்கு இரவெதற்கு…
இரவிலே அல்லியை அணைப்பதற்கு…
நான் உன்னை அணைப்பேனே…
ஆண் : இரவெதற்கு…
பெண் : நில்லடி என்றது உள்மனது…
—BGM—
ஆண் : சொல்லவா சொல்லவா நான் நல்ல சேதி…
பக்கம் வா வெட்கமே நீ சரி பாதி…
தாமதம் இன்னுமா இது நல்ல நேரம்…
பெண் : நெருங்கினேன் மயங்கினேன் மலை அருவி ஓரம்…
ஆண் : கங்கைக்கரை ஓரம் வந்து பாட்டு சொல்ல கூடாதா…
பெண் : மங்கை அந்த மாலைப்பொழுதில் மயங்குவேனே தானாக…
ஆண் : ஈருடல் இனி ஓருயிர் என வாழப்போகும் காலமே…
பெண் : நில்லடி என்றது உள்மனது…
ஆண் : செல்லடி என்றது…
பெண் : பெண்மனது…
நில்லடி என்றது உள்மனது…
—BGM—
பெண் : இருவிழி மலர்ந்தது உன் முகம் காண…
இடைவெளி ஆனது இதற்காகத்தானா…
ஆண் : வளர்வது வளர்ந்தது நம் காதல் கீதம்…
பெண் : மன்னவா அருகில் வா அது ஒன்று போதும்…
ஆண் : கண்ணும் கண்ணும் கலந்ததினாலே…
கண்ணன் மனம் கவி பாட…
இன்னும் இன்னும் வேண்டும் என்று…
ராதை மனம் எனைத்தேட…
பெண் : ஒரு நாளிலே பல காலங்கள்…
நாம் வாழ்ந்த வாழ்வு தோணுதே…
ஆண் : நில்லடி என்றது…
பெண் : உள்மனது…
ஆண் : செல்லடி என்றது…
பெண் : பெண்மனது…
ஆண் : ஒளி தரும் நிலவுக்கு இரவெதற்கு…
பெண் : இரவிலே அல்லியை அணைப்பதற்கு…
ஆண் : நான் உன்னை அணைப்பேனே…
பெண் : இரவெதற்கு…
ஆண் : நில்லடி என்றது…
பெண் : உள்மனது…
ஆண் : செல்லடி என்றது…
பெண் : பெண்மனது…
ஆண் : நில்லடி…
Notes : Nilladi Endradhu Song Lyrics in Tamil. This Song from Kaalamellam Kaathiruppen (1997). Song Lyrics penned by R. Sundarrajan. நில்லடி என்றது பாடல் வரிகள்.