பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | டி.எம்.சௌந்தரராஜன் | எம்.எஸ்.விஸ்வநாதன் | உரிமைக்குரல் |
Neththu Poothale Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு…
பறிக்க கூடாதோ லேசா தொட்டு…
—BGM—
ஆண் : நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு…
பறிக்க கூடாதோ லேசா தொட்டு…
ஆண் : கட்டி போடாத குமரி சிட்டு…
கண்கள் பாடாதோ காதல் மெட்டு…
கட்டி போடாத குமரி சிட்டு…
கண்கள் பாடாதோ காதல் மெட்டு…
ஆண் : நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு…
பறிக்க கூடாதோ லேசா தொட்டு…
—BGM—
ஆண் : கிட்ட வந்தாலே கோபம் வரும்…
விட்டு போனாலே தாபம் வரும்…
கிட்ட வந்தாலே கோபம் வரும்…
விட்டு போனாலே தாபம் வரும்…
ஆண் : தத்தி தள்ளாடும் தங்க குடம்…
வந்து சேராதோ அந்தப்புறம்…
தத்தி தள்ளாடும் தங்க குடம்…
வந்து சேராதோ அந்தப்புறம்…
ஆண் : உன்னை பூவா நெனப்பேன்…
நெனச்சு கையால் எடுப்பேன்…
எடுத்து நெஞ்சோடணைப்பேன்…
அணைச்சு எல்லாம் முடிப்பேன்…
அணைச்சு எல்லாம் முடிப்பேன்…
ஆண் : நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு…
பறிக்க கூடாதோ லேசா தொட்டு…
—BGM—
ஆண் : பெட்டை பின்னோடு சேவல் வரும்…
சேவல் பின்னோடு ஆவல் வரும்…
பெட்டை பின்னோடு சேவல் வரும்…
சேவல் பின்னோடு ஆவல் வரும்…
ஆண் : ஆவல் வந்தாலே காதல் வரும்…
காதல் வந்தாலே ஊடல் வரும்…
ஆவல் வந்தாலே காதல் வரும்…
காதல் வந்தாலே ஊடல் வரும்…
ஆண் : இந்த காதல் கணக்கு…
நமக்கு கண்ணில் இருக்கு…
இதுக்கு காலம் எதுக்கு
நெருங்க நேரம் ஒதுக்கு…
நெருங்க நேரம் ஒதுக்கு…
ஆண் : நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு…
பறிக்க கூடாதோ லேசா தொட்டு…
—BGM—
ஆண் : அம்மன் தேராட்டம் ஆடிக்கொண்டு…
அன்ன கிளியாட்டம் பாடிக்கொண்டு…
அம்மன் தேராட்டம் ஆடிக்கொண்டு…
அன்ன கிளியாட்டம் பாடிக்கொண்டு…
ஆண் : அர்த்த ஜாமத்தில் தேடிக்கொண்டு…
நித்தம் வருவாளோ அல்வா துண்டு…
அர்த்த ஜாமத்தில் தேடிக்கொண்டு…
நித்தம் வருவாளோ அல்வா துண்டு…
ஆண் : இந்த மாமன் மயக்கம்…
விடிஞ்சா தீரும் வரைக்கும்…
மனசு தாவி குதிக்கும்…
உடம்பு தீயா கொதிக்கும்…
உடம்பு தீயா கொதிக்கும்…
ஆண் : நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு…
பறிக்க கூடாதோ லேசா தொட்டு…
கட்டி போடாத குமரி சிட்டு…
கண்கள் பாடாதோ காதல் மெட்டு…
ஆண் : நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு…
பறிக்க கூடாதோ லேசா தொட்டு…
Notes : Neththu Poothale Song Lyrics in Tamil. This Song from Urimaikural (1974). Song Lyrics penned by Vaali. நேத்து பூத்தாளே பாடல் வரிகள்.