நீதானா நெசந்தானா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்கே.ஜே.யேசுதாஸ் & கே.எஸ். சித்ராகங்கை அமரன்நாளெல்லாம் பௌர்ணமி

Neethana Nesamthana Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நீதானா நெசந்தானா…
நிக்க வச்சி நிக்க வச்சி பாக்குறேன்…

பெண் : ஆத்தாடி மடிதேடி…
அச்சு வெல்லம் பச்சரிசி கேக்குறேன்…

ஆண் : எனக்கென்ன ஆகுது எதமாக நோகுது…
தொண்டைக்குழி தண்ணி வத்திப் போகுது…

பெண் : நீதானா நெசந்தானா…
நிக்க வச்சி நிக்க வச்சி பாக்குறேன்…

ஆண் : ஆத்தாடி மடிதேடி…
அச்சு வெல்லம் பச்சரிசி கேக்குறேன்…

BGM

பெண் : கூட்டாஞ்சோறு நீ போட…
கும்மிப் பாட்டு நான் பாட…
சொல்லாம கிள்ளாத வக்கீல் இல்ல வாதாட…

ஆண் : வெக்கம் வந்து போராட…
என்ன சொல்லி நான் பாட…
சொந்தந்தான் மாறாது ஊத்துத் தண்ணி ஆத்தோட…

பெண் : மோகத்தத் தூண்டாதீங்க..
முந்தானை தாண்டாதீங்க…

ஆண் : வாங்க அதை வாங்க…
எம்மடி மேலே உக்காருங்க… ஹும்…

பெண் : நீதானா நெசந்தானா…
நிக்க வச்சி நிக்க வச்சி பாக்குறேன்…

ஆண் : அடி ஆத்தாடி மடிதேடி…
அச்சு வெல்லம் பச்சரிசி கேக்குறேன்…

BGM

ஆண் : ஒன்னப் பார்த்து நாளாச்சு…
புத்தி மாறி போயாச்சு…
ஏ… பொண்ணே ஓம் பெண்மை…
யாரக் கேட்டு ஆளாச்சு…

பெண் : எப்பப்பாரு வீண் பேச்சு…
இந்த மேனி நூலாச்சு…
தை மாசம் வந்தாச்சு…
தங்கத்தாலி என்னாச்சு…

ஆண் : சொந்தத்த விட்டுப்புட்டு…
வா புள்ளே வாக்கப்பட்டு…

பெண் : வேணாம் வேணாம்…
மீறாதே வெக்கங்கெட்டு…

ஆண் : நீதானா நெசந்தானா…
நிக்க வச்சி நிக்க வச்சி பாக்குறேன்…

பெண் : ஆத்தாடி மடிதேடி…
அச்சு வெல்லம் பச்சரிசி கேக்குறேன்…

ஆண் : எனக்கென்ன ஆகுது எதமாக நோகுது…
தொண்டைக்குழி தண்ணி வத்திப் போகுது…

பெண் : நீதானா நெசந்தானா…
நிக்க வச்சி நிக்க வச்சி பாக்குறேன்…

ஆண் : ஆத்தாடி மடிதேடி…
அச்சு வெல்லம் பச்சரிசி கேக்குறேன்…


Notes : Neethana Nesamthana Song Lyrics in Tamil. This Song from Nalellam Pournami (1986). Song Lyrics penned by Gangai Amaran. நீதானா நெசந்தானா பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top