பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | எஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகி | இளையராஜா | மகுடி |
Neelakuyile Song Lyrics in Tamil
பெண் : கபகரிசா ரிஸசதச…
ஆண் : கபகரிசா ரிஸசதச…
பெண் : சரிகபகரி கபகரி சரிசா…
ஆண் : சரிகபகரி கபகரி சரிசா…
பெண் : கபதப கபகரி சரிகபசா…
ஆண் : கபதப கபகரி சரிகபசா…
பெண் : தபதபதப…
ஆண் : கபதபதப…
பெண் : தபதபதப…
ஆண் : கபதபதப கபதபகப…
—BGM—
பெண் : நீலக்குயிலே உன்னோடு நான் பண் பாடுவேன்…
நாதப்புனலில் அன்றாடம் நான் நீராடுவேன்…
இந்நாளிலே சங்கீதமும் சந்தோசமும் ஒன்றானதே…
உள்ளம் பாமாலை பாடுதே…
ஆண் : நீலக் குயிலே உன்னோடு நான் பண் பாடுவேன்…
நாதப்புனலில் அன்றாடம் நான் நீராடுவேன்…
இந்நாளிலே சங்கீதமும் சந்தோசமும் ஒன்றானதே…
உள்ளம் பாமாலை பாடுதே…
பெண் : நீலக் குயிலே உன்னோடு நான் பண் பாடுவேன்…
ஆண் : நாதப்புனலில் அன்றாடம் நான் நீராடுவேன்…
—BGM—
பெண் : அதிகாலை நான் பாடும் பூபாளமே…
ஆனந்த வாழ்த்துக்கள் காதில் சொல்லு…
ஆண் : நாள்தோறும் நான் பாடும் தேவாரமே…
நீங்காமல் நீ வந்து நெஞ்சை அள்ளு…
பெண் : ஆகாயம் பூமி ஆனந்த காட்சி…
ஆண் : சந்தோஷம் பொங்க சங்கீதம் சாட்சி…
பெண் : திசைகளில் எழும் புது இசை அமுதே வா வா…
ஆண் : நீலக் குயிலே உன்னோடு நான் பண் பாடுவேன்…
பெண் : நாதப்புனலில் அன்றாடம் நான் நீராடுவேன்…
ஆண் : இந்நாளிலே சங்கீதமும் சந்தோசமும் ஒன்றானதே…
பெண் : உள்ளம் பாமாலை பாடுதே…
ஆண் : நீலக் குயிலே உன்னோடு நான் பண் பாடுவேன்…
பெண் : நாதப்புனலில் அன்றாடம் நான் நீராடுவேன்…
—BGM—
பெண் : நீர் கொண்டு போகின்ற கார்மேகமே…
தூரல்கள் நீ போட தாகம் தீரும்…
ஆண் : நதி பாயும் அலையோசை சுருதியாகவே…
நாணல்கள் கரையோரம் ராகம் பாடும்…
பெண் : மலர்கூட்டம் ஆடும் மலைச்சாரல் ஓரம்…
ஆண் : பனிவாடை காற்று பல்லாண்டு பாடும்…
பெண் : செவிகளில் விழும் சுரலய சுகமே வா வா…
பெண் : நீலக் குயிலே உன்னோடு நான் பண் பாடுவேன்…
ஆண் : நாதப்புனலில் அன்றாடம் நான் நீராடுவேன்…
பெண் : இந்நாளிலே சங்கீதமும் சந்தோசமும் ஒன்றானதே…
ஆண் : உள்ளம் பாமாலை பாடுதே…
பெண் : நீலக் குயிலே உன்னோடு நான் பண் பாடுவேன்…
ஆண் : நாதப்புனலில் அன்றாடம் நான் நீராடுவேன்…
Notes : Neelakuyile Song Lyrics in Tamil. This Song from Magudi (1984). Song Lyrics penned by Vaali. நீலக்குயிலே பாடல் வரிகள்.