நீ கிடைத்தாய்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நிரஞ்சன் பாரதிஹரிசரண் & சின்மயியுவன் சங்கர் ராஜாசென்னை 28 – 2

Nee Kidaithai Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீ கிடைத்தாய்…
ஒரு முன்னை தவம் போலே…
இளம் கன்னி பிறப்பாலே…
இது உந்தன் அன்பாலே…
இந்நாளே பொன்னாலே…

பெண் : என் நினைவோ…
தினம் உன்னை சுற்றும் நானே…
மனம் எல்லாம் சுகம்தானே…
எங்கும் உன்னை கண்டேனே…
என்னானேன் ஏதானேன்…

ஆண் : விடுதலை ஆன மனம்…
அடிமை என்றாவதென்ன…
முடிவின்றி போவதென்ன…
முன்னும் பின்னும் எண்ணமின்றி தடுமாற…

பெண் : படித்த போதே…
இணைந்த உயிரானோம்…
பதவி ஏற்றோம்…
உண்மை இதுதான்…

குழு : மனமெல்லாம் துள்ள துள்ள…
மகிழ்ந்தோடும் காவேரி…
விழியெல்லாம் வண்ணம் பூசி…
விளையாடிடுதே…

குழு : மனமெல்லாம் துள்ள துள்ள…
மகிழ்ந்தோடும் காவேரி…
மேலேறி ஓடாதோ…
இங்கும் அங்கும் எங்கும்…
பொங்கி பாயாதோ… ஓ…

பெண் : என் நினைவோ…
தினம் உன்னை சுற்றும் நானே…
மனம் எல்லாம் சுகம்தானே…
எங்கும் உன்னை கண்டேனே…
என்னானேன் ஏதானேன்… ஹேய்…

BGM

பெண் : எங்கே போனாலும்…
உன்னுடைய எண்ணம் இல்லாமல்…
என்னிடத்தில் சொல்லாமலே…
என் இதயம் நின்றே போகும்…

ஆண் : அன்புடைய ஆதிக்கமே…
என்றும் என்னை பாதிக்குமே…
அற்புதங்கள் சாதிக்குமே…
வாழும் வரை நீடிக்குமே… நீங்காதே…

பெண் : எனது ஜீவன்…
எனது ஆதாரம்…
எனது சுவாசம்…
உந்தன் கண்ணோரம்…

ஆண் : நீ கிடைத்தாய்…
ஒரு முன்னை தவம் போலே…
இளம் கன்னி பிறப்பாலே…
இது உந்தன் அன்பாலே…
இந்நாளே பொன்னாலே…

பெண் : என் நினைவோ…
தினம் உன்னை சுற்றும் நானே…
மனம் எல்லாம் சுகம்தானே…
எங்கும் உன்னை கண்டேனே…
என்னானேன் ஏதானேன்…

குழு : மனமெல்லாம் துள்ள துள்ள…
மகிழ்ந்தோடும் காவேரி…
மேலேறி ஓடாதோ…
இங்கும் அங்கும் எங்கும்…
பொங்கி பாயாதோ… ஓ…

BGM


Notes : Nee Kidaithai Song Lyrics in Tamil. This Song from Chennai 28 – 2 (2016). Song Lyrics penned by Niranjan Bharathi. நீ கிடைத்தாய் பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top