பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | ஆல்பம் |
உளுந்தூர்பேட்டை சண்முகம் | சீர்காழி கோவிந்தராஜன் | குன்னக்குடி வைத்தியநாதன் | பெருமாள் பாடல்கள் |
Narayana Enum Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : நாராயணா என்னும் பாராயணம்…
நலம் யாவும் தருகின்ற தேவாம்ருதம்…
தேவாம்ருதம் தேவாம்ருதம்…
நாராயணா என்னும் பாராயணம்…
நலம் யாவும் தருகின்ற தேவாம்ருதம்… தேவாம்ருதம்…
—BGM—
ஆண் : கோவிந்த நாம சங்கீர்த்தனம்…
குடிகொண்ட நெஞ்சில்தான் பெரும் ஆலயம்…
கோவிந்த நாம சங்கீர்த்தனம்…
குடிகொண்ட நெஞ்சில்தான் பெரும் ஆலயம்… பெரும் ஆலயம்…
ஆண் : நாராயணா என்னும் பாராயணம்…
நலம் யாவும் தருகின்ற தேவாம்ருதம்… தேவாம்ருதம்…
—BGM—
ஆண் : படியேறி வருவோர்க்கு பயம் இல்லையே…
பாவங்கள் தீர வேறு வழி இல்லையே…
திருமலை படியேறி வருவோர்க்கு பயம் இல்லையே…
பாவங்கள் தீர வேறு வழி இல்லையே…
—BGM—
ஆண் : துணையாவதவன் சங்கு சக்ராயுதம்…
தொழுவார்க்கு அருள்கின்ற திருவேங்கடம்…
துணையாவதவன் சங்கு சக்ராயுதம்…
தொழுவார்க்கு அருள்கின்ற திருவேங்கடம்… திருவேங்கடம்…
ஆண் : நாராயணா என்னும் பாராயணம்…
நலம் யாவும் தருகின்ற தேவாம்ருதம்… தேவாம்ருதம்…
—BGM—
ஆண் : சித்தி அளித்தொரு முக்தி கொடுத்திட…
சக்தி படைத்த மலை…
தேவர்கள் மூவர்கள் யாவரும் வேண்டிடும்…
சேடன் அணைத்த மலை…
ஆண் : சித்தி அளித்தொரு முக்தி கொடுத்திட…
சக்தி படைத்த மலை…
தேவர்கள் மூவர்கள் யாவரும் வேண்டிடும்…
சேடன் அணைத்த மலை…
ஆண் : தத்துவம் வேதம் உரைத்ததோர் சாரதி…
நித்தமும் வாழும் மலை…
தத்துவம் வேதம் உரைத்ததோர் சாரதி…
நித்தமும் வாழும் மலை…
ஆண் : தாயினும் இனிய ஓர் தூயவன் மாயவன்…
ஆளும் ஏழுமலை…
தாயினும் இனிய ஓர் தூயவன் மாயவன்…
ஆளும் ஏழுமலை…
ஆண் : ஏழுமலை… ஏழுமலை… ஏழுமலை…
Notes : Narayana Enum Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Ulundurpettai Shanmugam. நாராயணா என்னும் பாடல் வரிகள்.