நான் தேடும் செவ்வந்தி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்மணி சுப்புஇளையராஜா & எஸ். ஜானகிஇளையராஜாதர்மபத்தினி

Naan Thedum Sevvanthi Song Lyrics in Tamil


BGM

ஆண் : நான் தேடும் செவ்வந்தி பூவிது…
ஒரு நாள் பார்த்து…
அந்தியில் பூத்தது…

ஆண் : பூவோ இது வாசம்…
போவோம் இனி காதல் தேசம்…
பூவோ இது வாசம்…
போவோம் இனி காதல் தேசம்…

ஆண் : நான் தேடும் செவ்வந்தி பூவிது…
ஒரு நாள் பார்த்து…
அந்தியில் பூத்தது…

BGM

ஆண் : பறந்து செல்ல வழியில்லையோ…
பருவ குயில் தவிக்கிறதே…

பெண் : சிறகிரண்டும் விரித்துவிட்டேன்…
இளம் வயது தடுக்கிறதே…

ஆண் : பொன்மானே…
என் யோகம்தான்…

பெண் : பெண்தானோ…
சந்தேகம்தான்…

ஆண் : என் தேவி…
பெண் : ஆஹா… ஆஆ… ஆஆ…

ஆண் : உன் விழி ஓடையில்…
நான் கலந்தேன்…
பொன் கனி விழும்…
என தவம் கிடந்தேன்…

பெண் : பூங்காத்து சூடாச்சு…
ராஜாவே யார் மூச்சு…

ஆண் : நான் தேடும்…
பெண் : செவ்வந்தி பூவிது…

ஆண் : ஆஹா… ஒரு நாள் பார்த்து…
பெண் : அந்தியில் பூத்தது…
ஆண் : ஆஹா…

BGM

பெண் : மங்கைக்குள் என்ன நிலவரமோ…
மஞ்சத்தில் விழும் நிலை வருமோ…

ஆண் : அன்னத்தை எந்தன் விரல் தொடுமோ…
என்றைக்கும் அந்த சுகம் வருமோ…

பெண் : தள்ளாடும் பெண் மேகம்தான்…
ஆண் : எந்நாளும் உன் வானம் நான்…

பெண் : என் தேவா…
ஆண் : ஆஹா… ஆஆ… ஆஆ…

பெண் : கண்மலர் மூடிட ஏன் தவித்தேன்…
என் விரல் நகங்களை தினம் இழந்தேன்…

ஆண் : தாலாட்டுப் பாடாமல்…
தூங்காது என் கிள்ளை…

ஆண் : நான் தேடும்…
பெண் : செவ்வந்தி பூவிது…

ஆண் : ஆஹா… ஒரு நாள் பார்த்து…
பெண் : அந்தியில் பூத்தது…

ஆண் : ஆஹா… ஆஆ… பூவோ இது வாசம்…
பெண் : போவோம் இனி காதல் தேசம்…
பூவோ இது வாசம்…
ஆண் : போவோம் இனி காதல் தேசம்…

ஆண் : நான் தேடும்…
பெண் : செவ்வந்தி பூவிது…

ஆண் : ஆஹா… ஒரு நாள் பார்த்து…
பெண் : அந்தியில் பூத்தது…
ஆண் : ஆஹா…


Notes : Naan Thedum Sevvanthi Song Lyrics in Tamil. This Song from Dharma Pathini (1986). Song Lyrics penned by Kanmani Subbu. நான் தேடும் செவ்வந்தி பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top