நான் மலரோடு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம்.சௌந்தரராஜன் & பி. சுசீலாவேதாஇரு வல்லவர்கள்

Naan Malarodu Song Lyrics in Tamil


ஆண் : நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்…
என் மகராணி உனைக்கான ஓடோடி வந்தேன்…
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்…
என் மகராணி உனைக்கான ஓடோடி வந்தேன்…

பெண் : நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்…
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்…

ஆண் : நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்…
என் மகராணி உனைக்கான ஓடோடி வந்தேன்…

BGM

ஆண் : நீ வருகின்ற வழி மீது யார் உன்னைக் கண்டார்…
உன் வலைகொஞ்சும் கை மீது பரிசென்ன தந்தார்…
நீ வருகின்ற வழி மீது யார் உன்னைக் கண்டார்…
உன் வலைகொஞ்சும் கை மீது பரிசென்ன தந்தார்…

ஆண் : உன் மலர் கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்
உன் வடிவான இதழ் மீது சுவை என்ன தந்தார்…
உன் மலர் கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்…
உன் வடிவான இதழ் மீது சுவை என்ன தந்தார்…

பெண் : நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்…
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்…

ஆண் : நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்…
என் மகராணி உனைக்கான ஓடோடி வந்தேன்…

BGM

பெண் : பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத…
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட…
பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத…
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட…

பெண் : என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்கள் ஆக…
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற…
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்கள் ஆக…
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற…

பெண் : நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்…
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்…

ஆண் : நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்…
என் மகராணி உனைக்கான ஓடோடி வந்தேன்…


Notes : Naan Malarodu Song Lyrics in Tamil. This Song from Iru Vallavargal (1966). Song Lyrics penned by Kannadasan. நான் மலரோடு பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top