பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
டி. ராஜேந்தர் | எஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி | டி. ராஜேந்தர் | எங்கள் குரல் |
Muthal Iravu Song Lyrics in Tamil
—BGM—
பெண் : முதல் இரவு… முழு நிலவு…
பாலும் கொண்டு… பழமும் கொண்டு…
பெண் : புது கவிதை வளம் கொழிக்கும்…
மேனி என்னும் புத்தகத்த சேல மறைக்குதாம்…
அதன் உள்ளிருக்கும் தத்துவத்தை…
காளையவன் படிப்பதற்கே மணம் முடித்ததாம்…
திருமணம் முடித்ததாம்…
இரு மனம் தவித்ததாம்…
பெண் : முதல் இரவு… முழு நிலவு…
—BGM—
பெண் : பாவை அவள் மேனியெங்கும்…
பத்து விரல் யாத்திரையாம்…
யாத்திரையின் தொல்லையிலே…
போனதெல்லாம் நித்திரையாம்…
பெண் : காலிலிட்ட கொலுசு கூட…
உரசையிலே ஆணையிடும்…
காலிலிட்ட கொலுசு கூட…
உரசையிலே ஆணையிடும்…
பெண் : குத்தி வந்த மூக்குத்தியை திருடி வச்ச…
நட்சத்திரம் என்று சொல்லுவான்…
கட்டி வந்த பட்டுச் சேல கட்டும்போது…
உறுத்துமென்று தனனனன்னா…
பெண் : முதல் இரவு… முழு நிலவு…
—BGM—
பெண் : மயக்கத்த வரவழைக்கும்…
மாயவரம் மல்லிகைப்பூ…
ஆரம்பத்தில் பளபளக்கும்…
அரவணைப்பில் பொலிவிழக்கும்…
பெண் : உதிர்வது பூச்சரமாம்…
உடைவது வளையல்களாம்…
உதிர்வது பூச்சரமாம்…
உடைவது வளையல்களாம்…
பெண் : அலங்கரித்த கட்டிலுக்கு…
கொஞ்சல்களை கேட்டதிலே கிளுகிளுப்பாம்…
அவள் மதிக்கும் ஆடைகளை…
அவமதிப்பில் வெரட்டுவது ஆடவர் குணமாம்…
பெண் : முதல் இரவு… முழு நிலவு…
பாலும் கொண்டு… பழமும் கொண்டு…
பெண் : புது கவிதை வளம் கொழிக்கும்…
மேனி என்னும் புத்தகத்த சேல மறைக்குதாம்…
அதன் உள்ளிருக்கும் தத்துவத்தை…
காளையவன் படிப்பதற்கே மணம் முடித்ததாம்…
பெண் : திருமணம் முடித்ததாம்…
இரு மனம் தவித்ததாம்…
திருமணம் முடித்ததாம்…
இரு மனம் தவித்ததாம்…
Notes : Muthal Iravu Song Lyrics in Tamil. This Song from Engal Kural (1985). Song Lyrics penned by T. Rajendar. முதல் இரவு பாடல் வரிகள்.