முதல் இரவு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி. ராஜேந்தர்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகிடி. ராஜேந்தர்எங்கள் குரல்

Muthal Iravu Song Lyrics in Tamil


BGM

பெண் : முதல் இரவு… முழு நிலவு…
பாலும் கொண்டு… பழமும் கொண்டு…

பெண் : புது கவிதை வளம் கொழிக்கும்…
மேனி என்னும் புத்தகத்த சேல மறைக்குதாம்…
அதன் உள்ளிருக்கும் தத்துவத்தை…
காளையவன் படிப்பதற்கே மணம் முடித்ததாம்…
திருமணம் முடித்ததாம்…
இரு மனம் தவித்ததாம்…

பெண் : முதல் இரவு… முழு நிலவு…

BGM

பெண் : பாவை அவள் மேனியெங்கும்…
பத்து விரல் யாத்திரையாம்…
யாத்திரையின் தொல்லையிலே…
போனதெல்லாம் நித்திரையாம்…

பெண் : காலிலிட்ட கொலுசு கூட…
உரசையிலே ஆணையிடும்…
காலிலிட்ட கொலுசு கூட…
உரசையிலே ஆணையிடும்…

பெண் : குத்தி வந்த மூக்குத்தியை திருடி வச்ச…
நட்சத்திரம் என்று சொல்லுவான்…
கட்டி வந்த பட்டுச் சேல கட்டும்போது…
உறுத்துமென்று தனனனன்னா…

பெண் : முதல் இரவு… முழு நிலவு…

BGM

பெண் : மயக்கத்த வரவழைக்கும்…
மாயவரம் மல்லிகைப்பூ…
ஆரம்பத்தில் பளபளக்கும்…
அரவணைப்பில் பொலிவிழக்கும்…

பெண் : உதிர்வது பூச்சரமாம்…
உடைவது வளையல்களாம்…
உதிர்வது பூச்சரமாம்…
உடைவது வளையல்களாம்…

பெண் : அலங்கரித்த கட்டிலுக்கு…
கொஞ்சல்களை கேட்டதிலே கிளுகிளுப்பாம்…
அவள் மதிக்கும் ஆடைகளை…
அவமதிப்பில் வெரட்டுவது ஆடவர் குணமாம்…

பெண் : முதல் இரவு… முழு நிலவு…
பாலும் கொண்டு… பழமும் கொண்டு…

பெண் : புது கவிதை வளம் கொழிக்கும்…
மேனி என்னும் புத்தகத்த சேல மறைக்குதாம்…
அதன் உள்ளிருக்கும் தத்துவத்தை…
காளையவன் படிப்பதற்கே மணம் முடித்ததாம்…

பெண் : திருமணம் முடித்ததாம்…
இரு மனம் தவித்ததாம்…
திருமணம் முடித்ததாம்…
இரு மனம் தவித்ததாம்…


Notes : Muthal Iravu Song Lyrics in Tamil. This Song from Engal Kural (1985). Song Lyrics penned by T. Rajendar. முதல் இரவு பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top