பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | எஸ்.பி.பாலசுப்ரமணியம் | லக்ஷ்மிகாந்த் பியாரேலால் | ரகசிய போலீஸ் |
Mayil Thogai Azhaithal Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : மயில்தோகை அழைத்தால் மழைமேகம் நெருங்கும்…
மடல்வாழை அழைத்தால் மழைச்சாரல் திரும்பும்…
மயில்தோகை அழைத்தால் மழைமேகம் நெருங்கும்…
மடல்வாழை அழைத்தால் மழைச்சாரல் திரும்பும்…
ஆண் : அழைக்காமல் வருவேன் அலுக்காமல் தருவேன்…
மனக்கோயில் சிலையே உனக்கேது விலையே…
ஆண் : வளைக்காமல் வளைக்கரம் தேட…
வருந்தாமல் துணைக்கரம் கூட…
இடைசேர நமக்கு இடைவேளை எதற்கு…
ஆண் : மயில்தோகை அழைத்தால் மழைமேகம் நெருங்கும்…
மடல்வாழை அழைத்தால் மழைச்சாரல் திரும்பும்…
—BGM—
ஆண் : நதியே மண்மீது நீ நடந்தால்…
என் ஆசைப் பூக்கும்…
பறித்தால் செந்தேனைச் சேர்த்து…
பனிப்பூ என்மீது வார்க்கும்…
ஆண் : பாவை உடல் புல்லாங்குழல்…
மெதுவாய்த் தொடும் உன்மன்னன் விரல்…
தீராது ஆசைப் பாடல்…
தொடங்கும் தொடரும் தலைவன் கூடல்…
ஆண் : மயில்தோகை அழைத்தால் மழைமேகம் நெருங்கும்…
மடல்வாழை அழைத்தால் மழைச்சாரல் திரும்பும்…
ஆண் : அழைக்காமல் வருவேன் அலுக்காமல் தருவேன்…
மனக்கோயில் சிலையே உனக்கேது விலையே…
ஆண் : வளைக்காமல் வளைக்கரம் தேட…
வருந்தாமல் துணைக்கரம் கூட…
இடைசேர நமக்கு இடைவேளை எதற்கு…
—BGM—
ஆண் : கடலில் இல்லாத மீனும்…
கணையில் விழாத மானும்…
விழியில் கொண்டாடும் மாது…
விடுமோ அன்றாடம் தூது…
ஆண் : காமன் விழா காணும் நிலா…
மடிமேல் விழும் என்மஞ்சள்புறா…
மேலாடை சூடி ஆடும்…
மெதுவாய் புதிதாய் கவிதை பாடும்…
ஆண் : மயில்தோகை அழைத்தால் மழைமேகம் நெருங்கும்…
மடல்வாழை அழைத்தால் மழைச்சாரல் திரும்பும்…
ஆண் : அழைக்காமல் வருவேன் அலுக்காமல் தருவேன்…
மனக்கோயில் சிலையே உனக்கேது விலையே…
ஆண் : வளைக்காமல் வளைக்கரம் தேட…
வருந்தாமல் துணைக்கரம் கூட…
இடைசேர நமக்கு இடைவேளை எதற்கு…
—BGM—
Notes : Mayil Thogai Azhaithal Song Lyrics in Tamil. This Song from Ragasiya Police (1995). Song Lyrics penned by Vaali. மயில்தோகை அழைத்தால் பாடல் வரிகள்.